இந்த பானத்தில் பெருஞ்சீரகமும் போட்டு குடிக்கலாம். இது நச்சு நீக்கம், அமிலத்தன்மை குறைய உதவும். கல்லீரலுக்கு நல்லது. பெருஞ்சீரகம், சீரகம் ஆகியவை உணவுக்குப் பின் இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிப்பதை குறைக்க உதவுகிறது. இதனால் இன்சுலின் உணர்திறனை மேம்படும். சர்க்கரை நோயாளிகள் காலையில் ஓமம், பெருஞ்சீரகம், சீரகம் போட்ட தண்ணீர் குடிக்கலாம்.