2. இந்த பொடியைச் சேர்த்துக் கொள்ளுங்கள்
மோர் ஒரு இயற்கையான புரோபயாடிக் பானம். இதில் கலோரிகளும், கொழுப்பும் மிகக் குறைவு. எனவே, நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதை எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம். வெறும் மோரைக் குடிப்பதைக் காட்டிலும், அதில் ஒரு சிட்டிகை சீரகப் பொடியைக் கலந்து குடித்தால் மிகவும் நல்லது. சீரகம் என்பது சமையலுக்கு சுவை தரும் ஒரு மசாலாப் பொருள் மட்டுமல்ல, அது பல மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு பொருளாகும். சீரகத்தில் புரதம், கால்சியம், துத்தநாகம் (Zinc), இரும்புச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் சி, கே, இ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆய்வுகளின்படி, சீரகத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு (Anti-inflammatory) பண்புகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.