- உங்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் உடனே மோர் குடிக்கலாம். ஏனெனில் இது அசிடிட்டியை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால் அதிக புளிப்பிலாத மோர் தான் குடிக்க வேண்டும்.
- அசிடிட்டி இருக்கும்போது சூடான நீரை கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பதன் மூலம் அசிடிட்டி பிரச்சனையை குறைத்து விடலாம்.
- சீரகம் நீர், சோம்பு நீர், துளசி நீர் போன்ற மூலிகை நீர் அசிடிட்டியை குறைக்க உதவுகிறது.
- நெஞ்செரிச்சல் இருக்கும்போது மூச்சை உள்ளே இழுத்து பொறுமையாக வெளியே விடுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் அசிடிட்டி குறையும்.
- நெஞ்செரிச்சல் இருக்கும்போது சிறிது தூரம் வாக்கிங் செய்து வந்தால் அமிலத்தன்மை குறையும்.