நெஞ்சு வலி மட்டும்தான் மாரடைப்பின் அறிகுறியா என்றால் இல்லை. எந்த நோய்க்கும் முன் உடல் சில சிக்னல்களைத் தரும். அதை கவனிக்கத் தவறுவதே பாதிப்புக்குக் காரணம். மாரடைப்பு வருவதற்கு முன் உடல் தரும் ரகசிய சிக்னல்களை இப்போது தெரிந்துகொள்ளுங்கள்!
பல் சொத்தை இல்லை, ஆனா திடீரென தாடையிலும், பல்லிலும் கடுமையான வலி ஏற்படுகிறதா? இதயத்திற்கு செல்லும் நரம்புகளும், தாடை நரம்புகளும் நெருக்கமாக இருப்பதால், இதயம் தவிக்கும் போது தாடையில் வலி எதிரொலிக்கும். காரணம் இல்லாமல் கீழ் தாடை வலித்தால், உடனே அலர்ட் ஆகுங்கள்!
25
தீவிரமான, விசித்திரமான சோர்வு
வழக்கமான வேலைதான்.. ஆனா, இப்போதெல்லாம் ஒரு பக்கெட் தண்ணீர் தூக்கினால் கூட ரொம்ப சோர்வு ஏற்படுகிறதா? இதயம் பலவீனமடையும் போது, உடலின் மற்ற பாகங்களுக்கு ரத்தத்தை அனுப்ப அது கடுமையாக போராடும். இதனால் தான் இந்த அதீத சோர்வு. நன்றாக தூங்கியும் காலையில் எழ முடியாத அளவுக்கு சோர்வு இருந்தால், அது இதயம் போடும் அலாரம்!
35
காரணமில்லாத அஜீரணம், குமட்டல்
காரசாரமா எதுவும் சாப்பிடல.. ஆனா நெஞ்சு கருக்குது, வாந்தி வர்ற மாதிரி இருக்கா? பலரும் இதை சாதாரண 'அசிடிட்டி' என்று நினைத்து மாத்திரை சாப்பிட்டு விடுகிறார்கள். ஆனால், இதயத்தின் கீழ் பகுதியில் பாதிப்பு ஏற்படும் போது, அது வயிற்றுப் பகுதியில் வலியை தூண்டும். ஈனோ குடித்தும் நெஞ்செரிச்சல் சரியாகவில்லை என்றால், அது அசிடிட்டி அல்ல.. ஹார்ட் அட்டாக்கின் அறிகுறியாக இருக்கலாம்!
வெயிலே இல்லை, நல்ல குளிர்ச்சியான அறை.. ஆனாலும் உடல் முழுக்க பதற்றத்துடன் குளிர்ந்த வியர்வை கொட்டுகிறதா? அடைபட்ட தமனிகள் வழியே ரத்தத்தை செலுத்த இதயம் கூடுதல் எஃபெர்ட் போடும் போது, உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்த நரம்பு மண்டலம் வியர்வையை அள்ளி தெளிக்கும். காரணமே இல்லாமல் 'ஜில்லென்று' வியர்த்தால், உடனே மருத்துவரை அணுகுவது உசிதம்.
55
இடது கை மட்டுமல்ல.. வலது கையும் வலிக்கலாம்!
இடது கை வலிக்கிறது மட்டும்தான் மாரடைப்பு என நினைக்க வேண்டாம்; வலது கை அல்லது முதுகுப் பகுதியில் பரவும் வலியும் ஆபத்தே! நெஞ்சின் மையப்பகுதியில் ஆரம்பித்து, கழுத்து, முதுகு அல்லது இரண்டு கைகளுக்கும் வலி பரவுவது மாரடைப்பின் மிக முக்கிய சிக்னல். இந்த வலி சில நிமிடங்கள் வந்து வந்து போனால், அதை சாதாரண தசைப்பிடிப்பு என்று அலட்சியப்படுத்தாதீர்கள்.