கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் காரணமாக உடல் சூடு அதிகரிக்கும்.உடலின் ஆரோக்கியத்திற்கு வெறும் தண்ணீர் குடித்தால் மட்டும் போதாது. உடல் ஆரோக்கியத்தைக் காக்கவும் வெப்ப பாதிப்புகளைத் தடுக்கவும் சில இயற்கை பானங்களைத் தொடர்ந்து குடிப்பது நல்லது.
வெறும் மோர் குடிச்சா போர்! அதுல கொஞ்சமா இடிச்ச இஞ்சி, சீரகம், இரண்டு புதினா இலைகளைப் போட்டு குடிங்க. இது உடம்பை ஜில்லுனு ஆக்குறது மட்டுமில்ல, உங்க செரிமானத்தையும் சூப்பராக்கும்! மண்பானை மோருக்கு தனி பவர் உண்டு!
25
இளநீர் ஷேக்
இளநீர் குடிப்பீங்க, ஓகே. ஆனால், இளநீர் தண்ணியோட, அதோட வழுக்கையையும் சேர்த்து, கொஞ்சமா ஏலக்காய் தூள் தூவி மிக்ஸில ஒரு ஓட்டு ஓட்டி குடிச்சுப் பாருங்க! இது உடம்போட எலக்ட்ரோலைட் அளவை சமன் செஞ்சு, சூட்டை அடியோட விரட்டும்.
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம். இதோட புதினா இலைகளையும், ஒரு சிட்டிகை பிங்க் உப்பும் (Pink Salt) சேர்த்து ஜூஸ் போடுங்க. இது உடம்பை உள்ளிருந்து குளிர்ச்சியாக்கும், சருமத்தையும் பளபளப்பாக்கும்!
55
வெந்தயத் தேநீர்
நைட்டே ஒரு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணிரில் ஊறப்போடுங்க. காலையில அந்த தண்ணியை லேசா சூடு பண்ணி (கொதிக்க வைக்கக் கூடாது), வடிகட்டி குடிங்க. இது இன்ஸ்டன்ட்டா உடல் சூட்டைக் குறைக்கும் பழங்காலத்து ரகசியம்!