சுத்தம் செய்த இறாலுடன் மஞ்சள் தூள், சிறிதளவு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
ஒரு அகன்ற கடாயில் நெய்யை ஊற்றவும், நெய் உருகியதும், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மசிய வதக்கிய பின்னர் மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும்.
இப்போது ஊறவைத்த இறாலை சேர்த்து நன்கு கிளறவும், கடைசியாக புளி தண்ணீர் சேர்த்து, இறால் நன்கு வெந்து, மசாலா இறாலுடன் சேரும் வரை வதக்கிய பிறகு, அடுப்பை அணைத்து கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து சூடாக பரிமாறவும்.