தமிழ்நாட்டை பொருத்தவரை இட்லி, தோசை தான் பெரும்பாலான வீடுகளில் சிற்றுண்டியாக இருந்து வருகிறது. தினமும் மாவு அரைக்க நேரம் இல்லாததால் சிலர் மாவை அரைத்து பிரிட்ஜில் சேமித்து வைப்பர். கிட்டத்தட்ட மாவை ஏழு நாள்கள் பயன்படுத்துபவர்களும் உண்டு. ஆனால் ஒன்று அல்லது இரண்டு நாள்களிலே மாவு புளித்துவிடுவதால், இட்லியை சாப்பிடும்போதே முகம் தன்னால் கோணிக் கொள்ளும். சில எளியமுறைகளை பின்பற்றி மாவு விரைவில் புளிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.