மறந்தும் அப்படியே சாப்டாதீங்க! இந்த 5 உலர் பழங்களையும் ஊறவைத்து சாப்பிட்டால் சத்துக்கள் இரட்டிப்பாகுமாம்..

First Published Jan 21, 2023, 5:16 PM IST

Dry fruits benefits: உலர் பழங்களை ஊறவைத்து உண்ணும் போது ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன. குளிர்காலத்தில் உலர் பழங்களை அதிகம் சாப்பிடுவதற்கான காரணங்கள் குறித்து இங்கு காணலாம். 

ஒவ்வொரு நாளும் ஒரு கைப்பிடி உலர் பழங்களை உண்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், புரதங்கள், தாதுக்கள் கிடைக்கும். குளிர்காலத்தில் உலர் பழங்களை அதிகம் சாப்பிட்டால் நல்லது என நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அவை நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, உடலை சூடாகவும் வைத்திருக்கின்றன. அதிலும் வெறுமனே இவற்றை சாப்பிடாமல் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் சாப்பிடுவது நல்லது என்கின்றனர் நிபுணர்கள். பாதாம், வால்நட், திராட்சை, அத்திப்பழம் போன்ற உலர் பழங்களை இரவில் ஊறவைத்து சாப்பிட்டால், அவற்றில் உள்ள சத்துக்கள் இரட்டிப்பாகும். 

ஊறவைத்த உலர் பழங்களை அதிகாலையில் சாப்பிட்டால் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும். இந்த ஊறவைக்கப்பட்ட உலர்ந்த பழங்கள் செரிமானத்திற்கு உதவுகின்றன. சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் மாற்றுகிறது. எந்த உலர் பழங்களை ஊற வைக்க வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம். 

 பாதாம் 

பாதாமை அப்படியே உண்பதை விட ஊறவைத்து எடுத்து கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஊறவைத்த பாதாமை தினமும் காலையில் எடுத்து கொள்ளலாம். இதில் இரும்புச்சத்து, போலேட், வைட்டமின் பி12, வைட்டமின் டி, வைட்டமின் ஈ உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் நம் உடலுக்கு மிகவும் சக்தி அளிப்பவை. பாதாம் இதயத்தை ஆரோக்கியமாகவும், சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும். இதனை தோலுரித்து உண்பது தான் சத்துக்களை பெற்று தரும். 

கருப்பு திராட்சை

கருப்பு திராட்சையிலும் பல சத்துக்கள் உள்ளன. இதனை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் சாப்பிடுவதால் ஒன்றல்ல, இரண்டல்ல, பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். முடி உதிர்வு குறைந்துவிடும். இரவில் ஆறு முதல் எட்டு திராட்சை, இரண்டு குங்குமப்பூ விதைகளை உண்டு வந்தால் மாதவிடாய் வலி குறையும். தள்ளி போகும் மாதவிடாய் சுழற்சி சீராகும். 

இதையும் படிங்க: மாத்திரைகள் இல்லாமல் பல நோய்களை குணமாக்கும் எளிமையான வீட்டு வைத்தியங்கள்...

வால் நட்ஸ் 

நம் உடலுக்கு மிகவும் நல்லது. இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் சாப்பிட்டால், நினைவாற்றலும், புத்திக்கூர்மையும் உண்டாகும். மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், இருமல், மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் வால்நட்ஸ் உதவும்

அக்ரூட் பருப்புகள் 

ஊற வைத்த அக்ரூட் பருப்பு, குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவை குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்தும். 

 அத்திப்பழம்

குளிர்காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட அத்திப்பழம் மிகவும் உதவியாக இருக்கும். இதற்கு சில அத்திப்பழங்களை இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். இதை தினமும் இரவில் ஊற வைத்து காலையில் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால், சில நாட்களில் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இந்த அத்திப்பழங்கள் பொதுவாக கர்ப்பிணிகளுக்கு நன்மை பயக்கும். 

உலர் பழங்களை அப்படியே சாப்பிடாமல் ஊற வைத்து சாப்பிட்டால் இரட்டிப்பு நன்மை கிடைக்கும். 

இதையும் படிங்க: உலக பணக்காரரின் மருமகள் என்றால் சும்மாவா...ராதிகா மெர்ச்சென்ட் பர்ஸ், ஆடை விலை தெரியுமா?

click me!