கம கம வாசனையில் ஆளை தூக்கும் ஆம்பூர் பிரியாணி!

First Published Oct 3, 2022, 1:38 PM IST

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் தயாரிக்கப்படும் சுவையான பிரியாணியை தான் ஆம்பூர் பிரியாணி என்கிறோம். ஆற்காட்டை ஆண்டு வந்த ஆற்காடு நவாப் மூலம் பிரபலமடடைந்த இந்தப் பிரியாணி ஆம்பூருக்கு சிறப்பான பெயரை கொடுத்துள்ளது. இன்றைய பதிவில் ஆம்பூர் சிக்கன் பிரியாணி எப்படி செய்வது என்பதை பற்றி நாம் காண உள்ளோம். 
 

அசைவ பிரியர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு என்றால் அது பிரியாணி தான். இறைச்சி, அரிசி மற்றும் பல மசாலாக்களை கொண்டு செய்யப்படும் உணவு தான் பிரியாணி. ஆம்பூர் பிரியாணி, ஹைராபாத் பிரியாணி, திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி, முகலாய பிரியாணி, பட்கல் பிரியாணி என பல விதமான பிரியாணி வகைகள் உள்ளன. 

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் தயாரிக்கப்படும் சுவையான பிரியாணியை தான் ஆம்பூர் பிரியாணி என்கிறோம். ஆற்காட்டை ஆண்டு வந்த ஆற்காடு நவாப் மூலம் பிரபலமடடைந்த இந்தப் பிரியாணி ஆம்பூருக்கு சிறப்பான பெயரை கொடுத்துள்ளது. இன்றைய பதிவில் ஆம்பூர் சிக்கன் பிரியாணி எப்படி செய்வது என்பதை பற்றி நாம் காண உள்ளோம். 

தேவையான பொருட்கள்:

சீரகசம்பா அரிசி - 1 கப்
சிக்கன் - 250 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
வர மிளகாய் -6
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
தயிர் - 3 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன் 
பட்டை - 2
கிராம்பு - 3
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - 2
மல்லி தழை - சிறிது பொடியாக நறுக்கியது 
புதினா - சிறிது 
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு 

செய்முறை:

பிரியாணி செய்வதற்கு முன் சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அலசி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வர மிளகாயயை 10 நிமிடம் ஊறவைத்து அதனை சிறிது நீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி , எண்ணெய் சூடானதும் அதில் பிரிஞ்சி இலை,கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.

ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் சிறுதானியங்கள் நமக்கு அவசியம் தேவை!

அதனுடன் இஞ்சி,பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை நன்றாக வதக்கி விட வேண்டும்.பின் அரைத்து எடுத்து வைத்துள்ள மிளகாய் விழுதை சேர்த்து நன்றாக வதக்கி விட்டு அதனுடன் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். பின் அலசி வைத்துள்ள சிக்கன் சேர்த்து வதக்கி விட வேண்டும். 

அடுத்து அதனுடன் பச்சை மிளகாய், தயிர் மற்றும் புதினா சேர்த்து வதக்கவும். பின் எலுமிச்சை சாறு சிறிது சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிக்கனை வேக வைக்க வேண்டும். தண்ணீர் வற்றிய நிலையில் சிக்கன் நன்றாக வெந்து காணப்படும்.

அடிக்கடி சளிப் பிடிக்குதா? மழைக்காலத்திற்கு ஏற்ற இந்த குழம்பு தான் உங்களுக்கு பெஸ்ட்!

ambur biriyani

10 நிமிடம் ஊறவைத்துள்ள 1 கப் அரிசியை குக்கரில் 2 கப் தண்ணீர் ஊற்றி சிக்கன் கலவை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 1 விசில் வந்ததும் அடுப்பை ஆப் செய்யவும். ஆவி அடங்கியவுடன் குக்கரை திறந்து சிறிது நெய் சேர்த்து கிளறி விட வேண்டும். கம கம வாசனையில் ஆளை தூக்கும் ஆம்பூர் சிக்கன் பிரியாணி தயார் !! 

click me!