பிறகு சிக்கனை நறுக்கி எடுத்த நன்கு சுத்தமாக கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஊற வைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து, ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் வரை நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு, அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் குக்கில் வேக வைக்க வேண்டும். அதே வேளையில் மற்றொரு அடுப்பில், அகன்ற கடாயை வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிவை சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும். அதன் பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு, நன்கு வதக்க வேண்டும்.
Kadaai Paneer : வடநாட்டு ஸ்டைலில் ருசியான ''கடாய் பன்னீர் கிரேவி''
பின்னர், மிளகாய் தூள், கூர்க் மசாலா தூள் ஆகியவை சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும். இறுதியாக, வெந்து கொண்டிருக்கும் சிக்கனை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி, சிக்கன் வேகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும். அதில், கொத்தமல்லியை தூவி 15-20 நிமிடம் மூடி வைத்தால், சூப்பரான கூர்க் சிக்கன் குழம்பு தயார்!!