பிரியாணி பிடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பிரியாணி என பெயரை கேட்டதுமே நாவில் எச்சில் ஊறி விடும். ஆனால், அதே பிரியாணியுடன் நாம் தெரியாமல் சேர்த்துக்கொள்ளும் சில உணவுகள், அந்த உணவின் நன்மையை கெடுத்து உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடும்.
பிரியாணியில் உள்ள மசாலா மற்றும் எண்ணெய் செரிக்க வெப்பம் தேவை. ஆனால், ஐஸ் போட்ட குளிர்பானங்களை குடிக்கும் போது செரிமானத் தீ அணைந்து, கொழுப்பு அப்படியே உடலில் தங்கிவிடும். இதற்கு பதில் நன்னாரி சர்பத் அல்லது சீரகத் தண்ணீர் சிறந்தது.
210
அளவுக்கு அதிகமான தயிர் பச்சடி
பிரியாணிக்கு தயிர் பச்சடி பெஸ்ட் காம்போ தான். ஆனால், தயிர் அதிக புளிப்பாக இருந்தால் அது நெஞ்செரிச்சலை உண்டாக்கும். தயிரில் உள்ள கால்சியமும், பிரியாணி மசாலாவும் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
310
இனிப்புப் பண்டங்கள் :
பிரியாணி சாப்பிட்ட உடனே ஜாமூன் அல்லது பாயசம் சாப்பிடும் வழக்கம் நமக்கிருக்கிறது. பிரியாணியிலேயே அதிக கார்போஹைட்ரேட் இருப்பதால், மீண்டும் சர்க்கரை சேரும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு எகிறி, உடனே தூக்கத்தையும் சோர்வையும் வரவழைக்கும்.
பிரியாணி சாப்பிட்ட அரை மணி நேரத்திற்குள் டீ குடிக்காதீர்கள். டீயில் உள்ள 'டானின்' (Tannin), பிரியாணியில் உள்ள இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதைத் தடுத்துவிடும்.
510
சிட்ரஸ் பழங்கள் :
பிரியாணி சாப்பிட்ட பிறகு ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற புளிப்பு பழங்களைச் சாப்பிடுவது வயிற்றில் அமிலத்தன்மையை (Acidity) அதிகரித்து, வயிற்றுப் புண்ணுக்கு வழிவகுக்கும்.
610
பப்பாளி பழம்
பிரியாணியில் இறைச்சி (ஆடு அல்லது கோழி) இருப்பதால், அதை செரிக்க உடல் போராடும். அதோடு பப்பாளி சேரும்போது சிலருக்கு வயிறு மந்தமாகி, செரிமானக் கோளாறு ஏற்படலாம்.
710
ஐஸ்கிரீம் :
சூடான பிரியாணிக்கு பின் ஜில்லிடும் ஐஸ்கிரீம் சாப்பிடுவது பற்களுக்கு மட்டுமல்ல, வயிற்றுக்கும் எதிரி. இந்த வெப்ப நிலை மாற்றம் செரிமான என்சைம்களின் செயல்பாட்டை முடக்கிவிடும்.
810
8. உருளைக்கிழங்கு சிப்ஸ் :
ஏற்கனவே எண்ணெயும் நெய்யும் கலந்த பிரியாணியுடன், மீண்டும் எண்ணெயில் பொரித்த சிப்ஸ் அல்லது அப்பளம் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
பிரியாணி சாப்பிடும் போது இடையிடையே தண்ணீர் குடிக்காதீர்கள். இது வயிற்றில் உள்ள ஜீரண நீரை நீர்த்துப்போகச் செய்யும். சாப்பிட்டு 20 நிமிடங்கள் கழித்து இதமான வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதே முறை.