தினமும் காலையில் ஒரு கிளாஸ் மாதுளை சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த நாளங்களை விரிவுபடுத்தி இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகின்றன. மேலும், வைட்டமின் சி நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கவும், ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.