உடலில் உள்ள வர்மம் என்ற ஆற்றல் புள்ளிகளை செயல்படுத்த வர்மநடைபாதை உதவுகிறது. உள்ளங்காலில் காணப்படும் வர்மப் புள்ளிகள் கூழாங்கற்கள் மீது நடக்கும்போது தூண்டப்படுகின்றன. இதற்காக 8 வடிவத்தில் கூழாங்கற்கள் நிரப்பிய நடைபாதையை வீட்டில் அமைத்து கொள்ளலாம். வீட்டின் எந்த இடத்திலும் இதை அமைக்க முடியும். மாடி, தோட்டம், முன்புறம் என வசதிக்கேற்ற இடத்தில் 8 வடிவத்தில் வர்ம நடைபாதையை ஏற்படுத்தலாம். ஆற்றங்கரையிலும் சென்று நடக்கலாம்.