கடலை மாவை முகத்திற்கு எப்படி பயன்படுத்துவது?
கடலை மாவு முகத்திற்கு பயன்படுத்துவது நல்லது. ஆனால் இது எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை. முகத்திற்கு கடலை மாவு போடுவதால் அதன் முழு பலனைப் பெற எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. கடலை மாவு - எலுமிச்சை:
2 ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அதை உங்கள் முகம் முழுவதும் தடவி, சுமார் 20 நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும்.
நன்மை : எலுமிச்சை சாற்றில் இருக்கும் சிட்ரிக் அமில முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் கருமையை குறைக்க பெரிதும் உதவும். கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு கலவையானது சூரிய ஒளியால் ஏற்படும் கருமையை நீக்கும் மற்றும் முகத்திற்கு பளபளப்பை கொண்டு வரும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.