காய்ந்த ரோஜா இதழ்களில் செய்யும் இந்த டீ சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்யை சமநிலைப்படுத்தும். சருமத்தை நீரேற்றமாக வைக்க உதவும். இதனால் வறண்ட சருமம் புத்துணர்வாகும். ரோஜா இதழ்களில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தி சுருக்கங்களை குறைக்கும். ரோஜா டீயுடன் துளசி இலைகளைப் போட்டு டீ அருந்தினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
ஒருநாள் குடிப்பதால் இதன் நன்மைகளை பெற முடியாது. தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு கப் மூலிகை டீ, ஆரோக்கியமான உணவு, நல்ல தூக்கம் சரும பொலிவு, முடி வளர்ச்சிக்கு உதவும்.