Uttrapradesh News
உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டம் 'பிப்ரைச்' என்ற ஊரைச் சேர்ந்தவர் ராம் கோவிந்த். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஷில்பா(34). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளன.
illegal love
இந்நிலையில் ஷில்பாவுக்கு பக்கத்து ஊரை சேர்ந்த இளைஞருடன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலனை பார்க்க முடியாமல் ஷில்பா மனவேதனையில் இருந்து வந்தார்.
uttrapradesh women Climbs up electric pole
இந்நிலையில் ஷில்பா தனது கள்ளக்காதலனை வீட்டில் சேர்த்துக்கொள்ளுமாறு கணவனிடம் கேட்டுள்ளார். இதற்கு கணவர் மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஷில்பா தனது வீட்டு முன் உள்ள உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அலறி கூச்சலிட்ட படியே கீழே இறங்குமாறு கூறினர். ஆனால், அவர் கீழே இறங்க மறுத்துவிட்டார்.
Video Viral
இதுதொடர்பாக தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சமாதானம் செய்து கயிறு கட்டி அந்த பெண்ணை உயிருடன் மீட்டார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.