அண்ணா ப்ளீஸ் என்ன விட்டுடுங்க! கதறி 17 வயது சிறுமி! இரண்டு நைட் விடாமல் கூட்டு பலாத்காரம்! வெளியான பகீர் தகவல்

First Published Mar 13, 2024, 8:34 AM IST

திருப்பூர் அருகே கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி பார்க்கச் சென்ற 17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

temple festival

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் கடந்த 9-ஆம் தேதி இரவு வீரக்குமாரசாமி கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அதே பகுதியில் கலை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியைப் பார்க்க அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், அவரின் தாயும் வந்துள்ளனர். இரவு நிகழ்ச்சி முடிய தாமதமானதால், சிறுமியை அவரின் தோழியுடன் விட்டுவிட்டு தாய் மட்டும் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

College Girl

இந்நிலையில், இரவு நீண்ட நேரமாகியும் மகளைக் காணாததால் அதிர்ச்சியடைந்த தாய் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு சென்றும் பல்வேறு இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். எங்கு தேடியும் மகள் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த தாய் வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் 11ம் தேதி அதிகாலை மாணவி வீட்டிற்கு வந்துள்ளார். 

இதையும் படிங்க: மகள் சாதி மறுப்பு திருமணம்.! மருமகனை ஆணவக் கொலை செய்ய ஸ்கெட்ச்.! சிக்கிய தங்கை.! நடந்தது என்ன?

Gang rape

அப்போது தாய் அவரிடம் விசாரித்த போது பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். தன்னை நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு நடந்து வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தன்னை வீட்டில் விட்டுவிடுதாக அழைத்து சென்று தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். திரும்பி இருசக்கர வாகனத்தில் வந்தபோது வழியில் மூலனூர் அருகே காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் மிரட்டி தன்னை அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

Police Arrest

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு பிறகு பிரபாகர், மணிகண்டன் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் தினேஷ், பாலசுப்பிரமணி, நவீன்குமார், நந்தகுமார், சதீஷ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை பாலியல் வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள ஒருவர் தேடப்பட்டு வருகிறார். 

இதையும் படிங்க: எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மனைவியுடன் கள்ளக்காதல்! கடுப்பான லாரி ஓட்டுநர்! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

AIADMK

மூலனூர் மாம்பாடி பகுதியைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளியான தினேஷ் அதிமுகவின் தாராபுரம் பகுதி தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்தவர். ஆட்டோ பைனான்ஸ் தொழில் செய்துவரும் இவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!