சனி பகவானின் அருள் கிடைக்க.. உடனே இவற்றைச் செய்யுங்கள்!!

First Published Feb 28, 2024, 7:36 PM IST

சனி பகவானின் அருள் நம் மீது இருக்க, நாம் கண்டிப்பாக இவற்றை செய்ய வேண்டும். அவை..

ஜாதகத்தில் சனியின் தாக்கம் இருந்தால் அதை பற்றி சொல்ல தேவையில்லை. நிதி முதல் ஆரோக்கியம் வரை அனைத்து வகையான சூழ்நிலைகளிலும் சனியின் தாக்கம் இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகிறார்கள். சனிபகவானின் அருளைப் பெற, சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். இப்போது அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் என்னவென்று பார்ப்போம்.

பொதுவாக பலருக்கு சனி என்றால் பயம் ஆனால் சனி பகவானின் உண்மை தன்மையை அறிந்தால் பயம் இருக்காது. ஜோதிடத்தில், சனி ஒரு நீதியை விரும்பும் கிரகமாக விவரிக்கப்பட்டுள்ளது. அது ஒரு மனிதனுக்கு அவனது கர்மங்களுக்கு ஏற்ப நல்ல மற்றும் கெட்ட பலன்களைத் தருகிறது. அதனால்தான் அவர் நீதியின் கடவுள் அல்லது கர்ம பலன்களைக் கொடுப்பவர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் சனி பகவானின் அருள் நம் மீது இருக்க, நாம் கண்டிப்பாக இவற்றை செய்ய வேண்டும். அவை..

நம்மை விட தாழ்ந்தவர்களை ஒருபோதும் துன்புறுத்தக்கூடாது என்கிறது ஜோதிடம். பலவீனர்களுக்கு துணை நிற்பவர்களுக்கு சனியின் அருள் எப்போதும் உண்டு.

இயற்கையின் வளர்ச்சிக்கு பங்களிப்பவர்களுக்கு சனி பகவான் சிறப்பான ஆசீர்வாதங்களை வழங்குவதாக கூறப்படுகிறது. சுற்றுவட்டார பகுதிகளை சுத்தமாக வைத்து, இயற்கை மற்றும் விலங்குகளுக்கு சேவை செய்தால், சனியின் அருளைப் பெறலாம்.
 

எந்தச் சூழ்நிலையிலும் உங்கள் சம்பாத்தியத்தை மற்றவர்களின் அழிவுக்குப் பயன்படுத்தக் கூடாது. அப்படிப்பட்டவர்கள் மீது சனி தோஷம் காட்டுகிறார். உங்கள் சம்பாத்தியத்தை முடிந்தவரை மற்றவர்களுக்கு சேவை செய்ய பயன்படுத்தவும்.

மற்றவர்களின் உரிமைகளை பறிக்க முயல்பவர்கள் மீது சனி கடுமையாக நடந்து கொள்வார் என்கின்றனர் வாஸ்து பண்டிதர்கள்.

இதையும் படிங்க: சனிக்கிழமையில் பிறந்த நபரா..? உங்களின் தொழில், காதல் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்.. செக் பண்ணுங்க!

அதிகாரம், பதவி, பணம் என்று கர்வம் கொண்டவர்களுக்கு சனியின் தாக்கம் அதிகம் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். பணத்தில் பெருமை கொள்பவர்களுக்கு சனி புத்தியை அளிப்பதாக ஐதீகம்.

கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு துணை நிற்பவர்களை சனி ஆசிர்வதிப்பதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். உதவிக்காக காத்திருப்பவர்களுக்கு சனிபகவான் சாதகமாக இருப்பார் என்பது ஐதீகம்.

இதையும் படிங்க: சனி பகவானை வழிபட சிறந்த நேரம் இதுதான்... பூஜையின் போது இந்த தவறை செய்யாதீர்கள்!

நீர் தானம் செய்தாலும் சனி பகவானின் அருள் கிடைக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள். குறிப்பாக கோடையில் ஜலதானம் செய்வது சிறந்தது என்று கூறப்படுகிறது.

போதை மற்றும் மது அருந்துபவர்கள் மீது சனி பகவான் கோபப்படுவார் என்று பண்டிதர்கள் எச்சரிக்கின்றனர். சனிக்கிழமையில் இறைச்சி சாப்பிடுவது சனியின் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!