ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பான 'செம்பருத்தி' சீரியல் மூலம் பிரபலமானவர் ஷபானா. தன்னுடைய முதல் சீரியலிலேயே தன்னுடைய அழகாலும், எதார்த்தமான நடிப்பாலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார். இந்த தொடர் வெற்றிகரமாக மூன்று ஆண்டுகள் ஒளிபரப்பாகி வந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
திருமணத்திற்கு பின்னர், ஆரியன் தற்போது ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகி வரும் 'மீனாட்சி பொண்ணுக' சீரியலில் நடித்து வருகிறார். ஷபானா சில காலம் சீரியலில் இருந்து விலகி இருந்த நிலையில், கடந்த ஆண்டு அதிரடியாக மிஸ்டர் மனைவி சீரியலில் நடிக்க துவங்கினார்.
ஒரு பெண் தன்னுடைய கணவரை ஆண் போல் துணிச்சலாக நின்று எப்படி எல்லாம் பார்த்து கொள்கிறார், கணவருக்காக எப்படி பட்ட கஷ்டத்தை அனுபவிக்கிறார் என்கிற கதைக்களத்தில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. விரைவில் ஷபானா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள ஹீரோயின் யார் என்கிற தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.