நெஞ்செரிச்சல் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். பொதுவாகவே இது உணவு சாப்பிட்ட பிறகு தான் வரும். அதுவே, கோடை காலத்தில் இது வந்தால், இதன் தீவிரம் இரண்டு மடங்காக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதற்குக் காரணம் நாம் சாப்பிடும் உணவுகள் தான். எனவே, நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் கோடையில் என்னென்ன உணவுகளை சாப்பிட கூடாது என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
ஃப்ரெஞ்ச் ஃப்ரை: பொதுவாகவே, உருளைக்கிழங்கை எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் கோடையில், வறுத்த அல்லது பொரித்த உருளைக்கிழங்கு சாப்பிட கூடாது. குறிப்பாக ஃப்ரெஞ்ச் ப்ரை சாப்பிடவே கூடாது. காரணம் அதில் இருக்கும் காரம், எண்ணெய் நெஞ்செரிச்சலை மேலும் தூண்டும்.
ஐஸ்க்ரீம்: ஐஸ்க்ரீம் கோடைக்கு ஏற்றது என்றாலும், நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் இதை கோடையில் சாப்பிட கூடாது. காரணம் இதில் பால் மற்றும் கொழுப்பு அதிகமாகவே உள்ளது. இவை நெஞ்செரிச்சலை தீவிரம் அடைய செய்யும்.
தக்காளி: இது கோடைக்கு ஏற்றது அல்ல. நெஞ்செரிச்சலை தூண்டும் சிட்ரிக் மற்றும் மாலிக் என இரண்டு அமிலங்கள் இதில் உள்ளது. எனவே, கோடையில் இதை உணவில் அதிகம் சேர்த்தாலும் கூட கடுமையான நெஞ்செரிச்சல் ஏற்படும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D