சென்னையில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் நள்ளிரவில் எழுப்பி படுகொலை.. தாய் கண் முன்னே நடந்த பயங்கரம்..!

First Published Apr 10, 2024, 12:14 PM IST

சென்னையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை தாய் கண்முன்னே சரமாரி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Chennai Crime News

சென்னை திருவேற்காடு சுந்தர சோழபுரம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விஜயகாந்த் (20). இவர் தனது தாய் சத்யாவுடன் வசித்து வந்தார்.நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த விஜயகாந்த் இரவு சாப்பிட்டு விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வந்த கும்பல் நள்ளிரவு ஒன்றரை மணியளவில் ஒரு கும்பல் விஜயகாந்த் வீட்டுக் கதவை தட்டியது. 
 

Youth Murder

இதனையடுத்து விஜயகாந்தின் தாய் சத்யா எழுந்து வந்து கதவைத் திறந்தார். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் அவரை தள்ளிவிட்டு  உள்ளே சென்று தூங்கிக் கொண்டிருந்த விஜயகாந்தை எழுப்பி சரமாரி வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். தாய் கண்ணெதிரே மகனை வெட்டி படுகொலை செய்ய முயற்சித்த போது தடுக்க முயன்ற அவருக்கும் வெட்டு விழுந்தது. 

இதையும் படிங்க: அந்த தாத்தா என்ன இப்படியெல்லாம் பண்ணாரு! தாயிடம் கதறிய மகள்! 67 கிழவனின் தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா?

Police investigation

பின்னர் சத்யாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இதுகுறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விஜயகாந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

click me!