Chennai Crime News
சென்னை திருவேற்காடு சுந்தர சோழபுரம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விஜயகாந்த் (20). இவர் தனது தாய் சத்யாவுடன் வசித்து வந்தார்.நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த விஜயகாந்த் இரவு சாப்பிட்டு விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வந்த கும்பல் நள்ளிரவு ஒன்றரை மணியளவில் ஒரு கும்பல் விஜயகாந்த் வீட்டுக் கதவை தட்டியது.
Police investigation
பின்னர் சத்யாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இதுகுறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விஜயகாந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.