அதாவது, வீட்டில் எல்லாரும் கூடியிருக்க மகா சீதாவை பார்த்து எதுக்கு ஜோசியரை பார்க்க போய் இருந்த? அவரை மிரட்ட போனியா என்று கேள்வி கேட்க சீதா மிரட்ட போகல உண்மையை சொல்ல வைக்க போய் இருந்தேன் என்று சொல்கிறாள். சேது நீ மாறவே மாட்டியா மகா என்று மகாலட்சுமியை திட்டுகிறார்.
சீதா எதுக்குங்க போலீசுடன் வந்து இருக்கீங்க என்று கேட்க உன்கிட்ட பேசவே பிடிக்கல என்று சொல்லி ஜோசியர் இறந்து விட்டதாக சொல்ல மகா ஏய் சீதா நீ தானே நைட் அவரை பார்க்க போய் இருந்த, கொன்னுட்டியா என்று கேட்க அர்ச்சனாவும் கூட சேர்ந்து சீதாவுக்கு எதிராக தாளம் தட்டுகிறாள். ராம் சீதா கையில் விலங்கு மாட்ட போய் கடைசியில் சுபாஷை கைது செய்ய மகாவும் அர்ச்சனாவும் அதிர்ச்சி அடைகின்றனர்.
ஜோசியரை கொன்னது சுபாஷ் சித்தப்பா தான், ஜோசியர் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் எல்லாம் பதிவாகி இருக்கு என்று அதிர்ச்சி கொடுக்கிறான். இதனால் மகா கோபமாக ரூமுக்குள் சென்று விட சீதா அவளை சந்தித்து என்னையும் என் குழந்தையையும் எதுக்கு கொல்ல பார்க்கறீங்க? எனக்கு என் குழந்தை தான் முக்கியம் நான் வீட்டை விட்டு போயிடுறேன் என்று வெளியே கிளம்பி வர ராம் எனக்கு குழந்தையும் என் பொண்டாட்டியும் தான் முக்கியம். நான் உங்களை என் அம்மாவாக தான் பார்த்தேன், ஆனால் நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல. நானும் இனி இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று கிளம்பி செல்கிறான்.
Trisha Movies: சவுத் குயின்... த்ரிஷா நடிப்பில் வெளியான இந்த 10 படங்களை கண்டிப்பாக பார்க்க மிஸ் பண்ணாதீங்க!
பிறகு சேது, துரை, மீரா என எல்லாரும் கிளம்பி செல்ல மகா தனிமரமாக நிற்க தனக்கு தானே தண்டனை கொடுத்து கொள்ள முடிவெடுத்து துப்பாக்கியை தலையில் வைத்து சுட சுடாமல் இருக்கிறது. பிறகு உள்ளே வரும் சீதா நான் தான் குண்டை எடுத்தேன் என்று சொல்ல மகா நான் உன்னை கொல்ல நினைத்தாலும் நீ என்னை காப்பாற்ற தான் நினைத்து இருக்க என்று மனம் மாறி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க செல்கிறாள்.