அதாவது மாயா ஜானகி தனம் என மூவரும் நல்ல வேலை மணிவண்ணன் அண்ணனால் பிரச்சனை இல்லாம போச்சு, அவர் சமாளிச்சிட்டாரு இன்று நிம்மதியாக பேசிக் கொண்டிருக்க மணிவண்ணன் வர அவருக்கு நன்றி சொல்கின்றனர்.
மணிவண்ணன் நீ யார் எனக்கு என்று கேட்க மாயா மருமக என்று சொல்ல நான் மாமா நீ மருமக என் மருமகளுக்காக இதைக் கூட பண்ண மாட்டேனா என்று சொல்ல, மாயா அவரது கையை பிடித்து கண் கலங்குகிறாள். அடுத்ததாக மாயா தனம் காலேஜ் கிளம்பி தயாராக இருக்க சீனு எப்போதும் மாயாவை அழைத்துச் செல்லும் நிலையில் இந்த முறை மாயாவை பவானி உடன் வர சொல்கிறான்.
பிறகு எல்லோரும் தனத்திடம் ட்ரீட் கேட்கின்றனர். இதனால் கேன்டீன் பார்க்க முடிவெடுக்க மாயா நான் வரவில்லை என்று சொல்லிவிட அவளை காத்திருக்க சொல்லிவிட்டு எல்லோரும் கேண்டின் செல்கின்றனர். கார்த்திக் எப்படி விளையாடின உன்னுடைய கேம் யுக்தி நல்லா இருந்தது என்று சொல்ல அது எல்லாத்தையும் உங்ககிட்ட இருந்து நீங்க விளையாட ஏதாவது பார்த்து தான் கத்துக்கிட்டேன் என்று தனம் சொல்ல கார்த்திக் சந்தோஷப்படுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.