முகேஷ் அம்பானி தற்போது இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராக உள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ. 963725 கோடி ஆகும். 1974000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சந்தை மூலதனத்துடன் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் ஆவார். முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனங்கள் மூலம் மகப்பெரிய அளவிலான வணிகங்களில் ஈடுபட்டுள்ளார்.
முகேஷ் அம்பானி தனது குடும்ப உறுப்பினர்களான நீதா அம்பானி, இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் அனந்த் அம்பானி ஆகி்யோர் இந்த நிறுவனங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆனால் முகேஷ் அம்பானியின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவரும் ரிலையன்ஸின் அதிக சம்பளம் வாங்கும் ஊழியராக இருக்கிறார்.
அவர், அம்பானி குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை விட இவர் ஆண்டுக்கு அதிக சம்பளம் வாங்குகிறார். ஆம். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் அதிக சம்பளம் வாங்கும் ஊழியர் நிகில் மேஸ்வானி. அவர் முகேஷ் அம்பானியின் முதல் முதலாளி ரசிக்பாய் மேஸ்வானியின் மகன். நிகில் மேஸ்வானி மற்றும் அவரது சகோதரர் தலா ரூ.24 கோடிக்கு மேல் சம்பாதிக்கின்றனர்.
முகேஷ் அம்பானி தனது தந்தை திருபாய் அம்பானியின் ஆதிக்கத்தில் இருந்த வணிக உலகில் நுழைந்தபோது ரசிக்பாய் மேஸ்வானி தான் அம்பானிக்கு வழிகாட்டியாக இருந்தார். ரசிக்பாய் திருபாய் அம்பானியின் மருமகன். அவர் ரிலையன்ஸின் இயக்குனர்களில் ஒருவராகவும் இருந்தார்.
இப்போது, ரசிக்பாய் மேஸ்வானியின் மகனும் முகேஷ் அம்பானியின் உறவினருமான நிகில் மேஸ்வானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் அதிக சம்பளம் வாங்கும் ஊழியர் ஆவார். முகேஷ் அம்பானியைப் போன்ற பாதையை அவர் பின்பற்றினார். திட்ட அலுவலராக தனது பணியைத் தொடங்கினார்.
பெட்ரோ கெமிக்கல் துறையில் ரிலையன்ஸ் நிறுவனத்தை உலகளாவிய அதிகார மையமாக நிலைநிறுத்துவதில் அவர் முக்கியப் பங்காற்றிய பெட்ரோ கெமிக்கல்ஸ் பிரிவில் அவரது முதன்மை கவனம் உள்ளது. நிகில் 1986 இல் ரிலையன்ஸில் சேர்ந்தார். ஜூலை 1, 1988 முதல் நிறுவனத்தின் குழுவில் நிர்வாக இயக்குநர் என்ற பட்டத்துடன் முழு நேர இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
Nikhil meswani
நிகில் மேஸ்வானி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் உரிமையான மும்பை இந்தியன்ஸ், இந்தியன் சூப்பர் லீக் மற்றும் நிறுவனத்தின் பிற விளையாட்டு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான முகேஷ் அம்பானி தலைமை தாங்கினாலும், அவர் சம்பளம் வாங்குவதில்லை. கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன், முகேஷ் அம்பானி ஆண்டுக்கு ரூ.15 கோடி சம்பளம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது