என்ன நடிப்புடா சாமி! தாலி கட்டிய பொண்டாட்டிய கொலை செய்துவிட்டு நாடகமாடிய பாதிரியார்! சிக்கியது எப்படி?

First Published May 2, 2024, 1:40 PM IST

குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்துவிட்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தது போல நாடகமாடிய பாதிரியாரை போலீசார் கைது செய்துள்ளனர். 

Chennai Crime News

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள குணாபா பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகளான வைஷாலி (33) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கிறிஸ்துவ பாதிரியாரான விமல்ராஜ் (35) என்பவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இருவரும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  சென்னை அருகே கேளம்பாக்கத்தை அடுத்துள்ள பொன்மார் பகுதியில் உள்ள மலைத்தெருவில் வீடு வாடகை எடுத்து வசித்து வந்தனர். விமல்ராஜின் பெற்றோர் மேடவாக்கத்தை அடுத்துள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தனர்.

Wife Murder

விமல்ராஜ் பொன்மார் பகுதியில் அட்வென்ட் கிறிஸ்துவ சபையின் துணை பாதிரியாராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஒட்டியம்பாக்கத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்த விமல்ராஜ், தனது மனைவி வைஷாலி உடல்நிலை குறைவால் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனை நம்பிய அவரது பெற்றோர், சடலத்தை வீட்டில் வைத்து வைஷாலியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

Police investigation

மும்பையில் இருந்து நேற்று முன்தினம் மாலை ஒட்டியம்பாக்கத்திற்கு வந்த வைசாலியின் பெற்றோர் மற்றும் சகோதரர் விஷால்குமார் ஆகியோர், வைஷாலியின் கழுத்தில் காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பாதிரியார் விமல்ராஜ் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் பாணியில் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

Priest arrested

அப்போது கணவர் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம் போல மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்ட போது ஆத்திரத்தில் அவரை கொடூரமாக தாக்கி கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து கொலை செய்துவிட்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்ததது போல  பாதிரியார் நாடகமாடியுள்ளார். இதையடுத்து வைஷாலியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தத சம்பவம் தொடர்பாக விமல்ராஜ் கைதுது செய்யப்பட்டுள்ளார். 

click me!