Prabhu Daughter Marriage: ஐஸ்வர்யாவின் 2-ஆவது திருமணத்திற்கு 500 கோடி வரதட்சிணை கொடுக்கப்பட்டதா? பிரபு தகவல்!

First Published Dec 22, 2023, 3:48 PM IST

 நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்திற்கு, பிரபு தரப்பில் இருந்து 500 கோடி வரதட்சணை கொடுக்கப்பட்டதாக வெளியான தகவல் குறித்து, பிரபு கொடுத்த விளக்கத்தை பத்திரிகையாளர் ஒருவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
 

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி ஹீரோவாக இருந்த நடிகர் பிரபுவின், மகள் ஐஸ்வர்யாவுக்கு ஏற்கனவே கடந்த 2009 ஆம் ஆண்டு, பிரபுவின் தங்கை மகன் குணாலுடன் திருமணம் நடந்த நிலையில் அந்த திருமணம் ஒரு சில வருடங்களிலேயே விவாகரத்தில் முடிந்தது.

திருமணத்திற்கு பின்னர் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த ஐஸ்வர்யா, விவாகரத்துக்கு பின்னர் சென்னையில் உள்ள தன்னுடைய அப்பா - அம்மாவுடன் வசித்து வந்தார். மேலும் பேக்கரி ஒன்றையும் வைத்து நிர்வாகம் செய்து வருகிறார்.

Top 10 TRP: பலத்த அடி.. இது என்ன எதிர்நீச்சலுக்கு வந்த சோதனை? கெத்து காட்டும் சிங்க பெண்ணே டாப் 10 பட்டியல்!

Adhik Aishwarya wedding

இந்நிலையில் பிரபல இயக்குனர், ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து இவர்களது காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்த நிலையில், டிசம்பர் 15ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இரண்டாவது திருமணம் நடந்தது.
 

Adhik Aishwarya wedding

இவர்களின் திருமணத்தில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு, இந்த ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக ரஜினி, கமல், அஜித்தின் மனைவி ஷாலினி, விஜய் சேதுபதி, உள்ளிட்ட பல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இந்த திருமணத்திற்கு வருகை தந்தனர்.

Bigg Boss Dhanalakshmi: கண்ணீருடன் பிக்பாஸ் தனலட்சுமி வெளியிட்ட வீடியோ! என்ன ஆச்சு பதறியபடி ஆறுதல் கூறும் ரசிக
 

பிரபு மகள் ஐஸ்வர்யா திருமணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது . அதில் மிகவும் முக்கியமானது நடிகர் பிரபு தரப்பில் இருந்து மகளின் இரண்டாவது திருமணத்திற்கு 500 கோடி வரதட்சனை கொடுத்திருக்கலாம் என பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியது. 

தற்போது இது குறித்து பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றில், இது பற்றி பிரபு கூறிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த 500 கோடி வரதட்சிணை தகவலை அறிந்த பிரபு, "ஏற்கனவே எங்கள் குடும்பத்தில் சொத்து பிரச்சனை இருக்கிறது.இதுல இது வேறயா... நான் 500 கோடியை, பத்திர பதிவு செய்து கொடுத்தது போல் பேசுகிறார்கள் எல்லோரும் . ஆனால் அப்படியெல்லாம் எதுவும் கொடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.  இதன் மூலம் இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!