40 வயதில் ரூ.24 லட்சம் கிடைக்கும்.. இந்த திட்டத்தில் தினமும் ரூ.250 முதலீடு செய்தால் போதும்..

First Published May 4, 2024, 1:36 PM IST

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (PPF) குறித்தும் அதன் பலன்கள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

எதிர்காலத்திற்கு பணத்தை சேமிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே உத்தரவாத வருமானம் மற்றும், பாதுகாப்பான முதலீடு தேவை என்று நினைபப்வர்களுக்கு தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் உதவியாக இருக்கும்.

மத்திய அரசு தபால் நிலையங்கள் பல்வேறு சிறு சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான திட்டம் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (PPF). இந்த பிபிஎஃப் திட்டம் குறித்தும் அதன் பலன்கள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

பிபிஎஃப் திட்டம் நன்மைகள்

18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடியுரிமை பெற்ற எவரும் தபால் நிலையத்தில் பிபிஎஃப் கணக்கை திறக்கலாம். தங்கள் பிள்ளைகள் சார்பாக பெற்றோர் அல்லது பாதுகாவல் இந்த கணக்கதை திறக்கலாம். 2023-24 நிதியாண்டில் இந்த திட்டத்திற்கான தற்போதைய வட்டி விகிதம் 7.1% ஆகும். பல சேமிப்பு திட்டங்கள் மற்றும் வங்கி நிலையான வைப்பு திட்டங்களை விட ஒப்பீட்டளவில் PPF திட்டத்தின் வட்டி விகிதம் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.. இது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் சேமிப்புத் திட்டமாக இருப்பதால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு பற்றி கவலைப்பட தேவையில்லை.

இந்த பிபிஎஃப் திட்டத்தில் ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் ரூ. 500, அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த கணக்கின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். ஆனாலும் முதிர்வு காலத்திற்கு பிறகு 5 ஆண்டுகளுக்கு, இந்த திட்டத்தை நீட்டிக்க முடியும். மேலும் இந்த திட்டத்தில் முன்கூட்டிய திரும்பப் பெறும் வசதியும் உள்ளது.

அதே போல் இந்த திட்டத்தில் கடன் பெறும் வசதியும் உள்ளது. எனினும் 5 ஆண்டுகள் தொடர்ச்சியான முதலீட்டை முடித்த பின்னரே முதலீட்டாளர்கள் 3வது நிதியாண்டிலிருந்து கடன் வசதியையும் பெறலாம். இந்த PF திட்டத்திலிருந்து வரிச் சலுகைகளையும் பெறலாம்.

ppf 3.jpg

PPF திட்டத்தின் மூலம் எப்படி 24 லட்சம் பெறுவது?

இந்த திட்டத்தில் தினமும் ரூ.250 சேமித்தால் போதும், ரூ. 24 லட்சம் பெறலாம். அதாவது, 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.7,500 முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் 25 வயதில் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்தத் திட்டம் 15 வருட திட்டமாக இருப்பதால், 40 வயது வரை மொத்தம் ரூ.13,50,000 முதலீடு செய்வீர்கள்.

இந்தத் திட்டத்தில் நீங்கள் 7.1 சதவீத வருமானத்தைப் பெற்றால், நீங்கள் ரூ. 10,90,926 வட்டியைப் பெறுவீர்கள், மேலும் மொத்த முதிர்வுத் தொகை ரூ. 24,40,926 ஆக இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்கள், இந்த முதலீட்டுத் தொகைக்கு வரி செலுத்தத் தேவையில்லை. 

ppf

இந்தியாவில் வசிக்கும் குடிமக்கள் மட்டுமே பிபிஎஃப் திட்டத்தை நீட்டிக்க முடியும். வேறு எந்த நாட்டின் குடியுரிமை பெற்ற இந்திய குடிமக்கள் இந்த கணக்கை திறக்கலாம், அல்லது ஏற்கனவே கணக்கு வைத்திருந்தால், அதை நீட்டிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். PPF நீட்டிப்புக்கு, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்திற்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

முதிர்வு தேதியிலிருந்து 1 வருடம் முடிவதற்குள் இந்த விண்ணப்பத்தை நீங்கள் கொடுக்க வேண்டும். உங்கள் விண்ணப்பத்தில் பிபிஎஃப் கணக்கின் காலம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டால், நீங்கள் ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் 500 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். இந்த குறைந்தபட்ச தொகையை நீங்கள் டெபாசிட் செய்யவில்லை என்றால், உங்கள் கணக்கு மூடப்படும். அதை மறுதொடக்கம் செய்ய, நீங்கள் ஆண்டுக்கு 50 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!