செல்போனில் ஆபாச வீடியோ காட்டி அதுபோல செய்யலாமா பள்ளி மாணவியிடம் கேட்ட தலைமை ஆசிரியர்! இறுதியில் நடந்தது என்ன?

First Published Apr 4, 2024, 12:45 PM IST

கோவையில் 5ம் வகுப்பு மாணவியிடம் ஆபாசப் படங்களைக் காட்டிய தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

School head master

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிவன்புரம் பகுதியை சேர்ந்தவர் பிராங்கிளின் (44). இவர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

police complaint

இந்நிலையில் கடந்த மாதம் 20-ம் தேதி அதே பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் செல்போனில் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை காட்டி பேசியதாக கூறப்படுகிறது.  இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

Posco Act

இந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியர் பிராங்கினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இதைத்தொடர்ந்து, தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து பள்ளி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 5ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியரே ஆபாச வீடியோ காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிள்ளது. 

click me!