சிப்ஸை பிடிக்காதவர்கள் யாருமே இல்லை என்றே சொல்லலாம். குழந்தைகள் முதல் பெரியவர் வரை என்ற பாகுபாடின்றி அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வெவ்வேறு விதமான சுவையிலும், கண்களை கவரும் விதமாக அதன் வடிவமும் இருக்கும். இதனால் தான் என்னமோ குழந்தைகள் சிப்ஸை ரொம்பவே விரும்பி சாப்பிடுகிறார்கள்.
ஆனால், இவற்றை உங்கள் குழந்தைக்கு வாங்கி கொடுக்கும் முன் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக யோசிக்க வேண்டும். காரணம் இவற்றின் பக்க விளைவுகள் தான். இப்போது, குழந்தைகள் சிப்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னவென்று பார்ப்போம்.
பொதுவாகவே, சிப்ஸ் கெட்டுப்போகாமல், பிரஷ்ஷாக இருக்க அதில் சோடியம் சேர்க்கப்படுகிறது. ஆனால், சோடியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், அவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது குழந்தைகளின் ஆரோக்கியத்தை படிப்படியாக பாதிக்கிறது.
முக்கியமாக, குழந்தைகள் அளவுக்கு அதிகமாக சிப்ஸ் சாப்பிட்டால் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், இது குழந்தையின்மைக்கு வழிவகுக்குமாம். அதுபோல இது குழந்தைகளுக்கு வாயு மற்றும் செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்குமாம். எனவே, நீங்கள் உங்கள் குழந்தைக்கு இதுபோன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை கொடுப்பதைத் தவிர்த்து ஆரோக்கியமுள்ளதை வாங்கி கொடுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D