அதாவது தமிழுக்காக ஏங்கி ஏங்கி அஞ்சலி உடம்பு சரியில்லாமல் போகிறது, மறுபக்கம் சுடர் வேலு அடைத்து வைத்திருக்கும் ரூமுக்குள் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறாள், யாராவது இருக்கீங்களா? கதவை திறங்க என்று சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தும் முடியாமல் போகிறது.
எழில் கலங்கி நிற்க கனகவல்லி அஞ்சலிக்காக அந்த பொண்ணை கூட்டிட்டு வா பா என்று சொல்ல மனோகரி எதுக்கு ஆண்ட்டி அவளை கூட்டிட்டு வரணும் என்று பேச கனகவல்லி டாக்டர் சொன்னதை கேட்டல என்று கோபப்படுகிறாள், பிறகு அவர் நகர்ந்து சென்றதும் மனோகரி சிட்டியிலேயே பெரிய டாக்டர் நீ, உன்னோட மெடிஸனால செய்ய முடியாததையா அந்த தமிழ் செய்துட போறா என்று திசை திருப்ப கவின் அஞ்சலி ஆகியோர் தமிழை கூட்டிட்டு வாங்க, இல்லனா நாங்க போய் கூட்டி வரோம் என்று சொல்ல எழில் அவர்களை திட்டி அனுப்புகிறான்.
பிறகு கனகவல்லியிடம் வீட்டிற்கு போறோம் என்று சொல்லி விட்டு வீட்டிற்கு வந்து இருவரும் தமிழ் பற்றிய தகவலுக்காக அவளது ரூமை ஆராய்கின்றனர், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.