Ninaithen Vanthaai: ஹாஸ்பிடலில் அட்மிட்டான அஞ்சலி! அதிர்ச்சி கொடுத்த டாக்டர்? நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

First Published Apr 29, 2024, 6:44 PM IST

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் அஞ்சலி தமிழுக்காக ஏங்க வேலு அவளை கடத்தி ரூமுக்குள் அடைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 
 

அதாவது தமிழுக்காக ஏங்கி ஏங்கி அஞ்சலி உடம்பு சரியில்லாமல் போகிறது, மறுபக்கம் சுடர் வேலு அடைத்து வைத்திருக்கும் ரூமுக்குள் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறாள், யாராவது இருக்கீங்களா? கதவை திறங்க என்று சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தும் முடியாமல் போகிறது. 

இதனை தொடர்ந்து மறுபக்கம் அஞ்சலி உடம்பு முடியாமல் போக அவளை ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்கின்றனர், எழில் அஞ்சலிக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க இன்னொரு டாக்டரும் அஞ்சலிக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கிறார், ஆனால் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் அஞ்சலி தமிழ் தமிழ் என புலம்புவதை கேட்கும் டாக்டர் அஞ்சலியை குணப்படுத்த தமிழ் என்ற பெண்ணால் மட்டும் தான் முடியும் என்று சொல்ல கனகவல்லி அதிர்ச்சி அடைகிறாள். 

Ethirneechal: சபாஷ்.. நச்சுனு கேள்வி எழுப்பிய ஞானம்! விசாலாட்சியை கோர்த்து விட்ட ஜனனி? எதிர்நீச்சல் அப்டேட்!

எழில் கலங்கி நிற்க கனகவல்லி அஞ்சலிக்காக அந்த பொண்ணை கூட்டிட்டு வா பா என்று சொல்ல மனோகரி எதுக்கு ஆண்ட்டி அவளை கூட்டிட்டு வரணும் என்று பேச கனகவல்லி டாக்டர் சொன்னதை கேட்டல என்று கோபப்படுகிறாள், பிறகு அவர் நகர்ந்து சென்றதும் மனோகரி சிட்டியிலேயே பெரிய டாக்டர் நீ, உன்னோட மெடிஸனால செய்ய முடியாததையா அந்த தமிழ் செய்துட போறா என்று திசை திருப்ப கவின் அஞ்சலி ஆகியோர் தமிழை கூட்டிட்டு வாங்க, இல்லனா நாங்க போய் கூட்டி வரோம் என்று சொல்ல எழில் அவர்களை திட்டி அனுப்புகிறான். 

அபி நாம போய் அஞ்சலியை கூட்டிட்டு வரலாம் என்று சொல்ல கவின் அப்பாவுக்கு தெரிந்தால் பனிஷ்மென்ட் கொடுப்பாரு என்று பயப்பட அபி அஞ்சலிக்காக அதையெல்லாம் பார்த்துக்கலாம் என்று சொல்கிறாள், கவின் எங்க போய் தேடுறது என்று கேட்க வீட்டுக்கு போனால் ஏதாவது ஐடியா கிடைக்கும் என்று சொல்கிறாள். 

Samantha: கேக் முன்பு கண்களை மூடி அமர்ந்திருக்கும் அழகு சிலை.! சமந்தாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

பிறகு கனகவல்லியிடம் வீட்டிற்கு போறோம் என்று சொல்லி விட்டு வீட்டிற்கு வந்து இருவரும் தமிழ் பற்றிய தகவலுக்காக அவளது ரூமை ஆராய்கின்றனர், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

click me!