Mrunal Thakur: நான் அப்படி நடிப்பதை பெற்றோர் விரும்பவில்லை! பல பட வாய்ப்புகளை இழந்தேன் மிருணாள் தாக்கூர்!

First Published Apr 30, 2024, 7:48 PM IST

பிரபல இளம் நடிகையான மிருணாள் தாகூர் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டதாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 

தமிழில் இதுவரை நேரடியாக ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்றாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியில் சென்சேஷனல் ஹீரோயினாக வலம் வருகிறார் மிருணாள் தாக்கூர். மராத்தி மொழியில் ஹீரோயினாக நடிக்க துவங்கிய மிருணாள் தாக்கூர், 'லவ் சோனியா' என்கிற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் நுழைந்தார். 

அடுத்தடுத்து தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் மிருணாள் தாக்கூர், கடந்த 2022-ஆம் ஆண்டு துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்த சீதா ராமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது தன்னுடைய கேரியரில் படு பிஸியான நடிகையாக மாறியுள்ள மிருணாள் தாக்கூர் நடிப்பில் கடந்த மாதம் ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில் நடிகை மிருணாள் தாக்கூர், தன்னுடைய பெற்றோருக்காக பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டதாக தெரிவித்துள்ளார். சில படங்களில் ஹீரோக்களுடன் நெருக்கமான காட்சிகளில் நான் நடிப்பதில் என்னுடைய பெற்றோருக்கு உடன்பாடு இல்லை, என்றும்... வரும் வாய்ப்புகள் அனைத்தையும் நிராகரித்துக்கொண்டே இருக்க முடியாது என்பதால் ஒரு கட்டத்தில் இது குறித்து தன பெற்றோரிடம் விளக்கி கூட வேண்டிய நிலை தனக்கு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

இது போன்ற காட்சிகளில் விரும்பி யாரும் நடிப்பதில்லை கதைக்களத்திற்கு தேவை என்பதால் மட்டுமே நடிக்கும் சூழல் உள்ளது என புரிய வைத்ததாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நெருக்கமான காட்சிகளில் நடிக்க தான் பயம் கொள்வது அன்பு என்பதையும் மிருணாள் தாக்கூர் கூறியுளளார்.

மிருணால் தாக்கூர் கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன், ஃபேமிலி ஸ்டார் படத்தில் நடித்திருந்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனந்த்தை பெற்ற போதிலும், மிருணாள் தாக்கூர் ஏற்று நடித்திருந்த  சிந்து கதாபாத்திரம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த கதாபாத்திரம் குறித்து மிகவும் உணர்வு பூர்வமாக பதிவு ஒன்றையும் போட்டிருந்தார் மிருணாள் தாகூர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!