30 வயது வாலிபனாக மாறி யங் லுக்கில் துல்கர் சல்மானுக்கே சவால்விட தயாரான மம்முட்டி... அடிபொலியான அப்டேட் இதோ

First Published Jan 29, 2024, 11:25 AM IST

மலையாள திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் மம்முட்டி, புது படத்தில் 30 வயது வாலிபன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மலையாள திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் மம்முட்டி. இவருக்கு தற்போது 72 வயது ஆனாலும், இன்னும் இளமை மாறாத தோற்றத்துடன் இருக்கிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த காதல் தி கோர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. ஜோ பேபி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். இப்படத்தில் மம்முட்டி ஓரினச்சேர்க்கையாளராக நடித்திருந்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

காதல் தி கோர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மம்முட்டி நடிப்பில் பிரம்மாயுகம் என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மம்முட்டி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 25-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை ராகுல் சதாசிவன் இயக்கி உள்ளார். ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... "சிரிப்பிலே ஸ்கோர் பன்றாரே.. மிரட்டலாக வெளியானது பிரமயுகம் டீசர் - மாறுபட்ட வேடத்தில் வருகின்றார் மம்மூட்டி!

இந்த நிலையில், மம்முட்டி நடிக்க உள்ள புதிய படம் குறித்த ருசீகர தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி மம்முட்டி புதிய படம் ஒன்றில் 30 வயது வாலிபனாக நடிக்க உள்ளாராம். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் அவரை AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளமையாக காட்ட உள்ளார்களாம். இதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன், கொச்சியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டபோது தெரிவித்தார். இந்தியாவில் பல்வேறு மொழிகளில் டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி வயதான நடிகர்களை இளம் கதாபாத்திரங்களில் காட்டி வந்தாலும், AI மூலம் இளம் கதாபாத்திரத்தில் காட்டும் முதல் இந்திய படமாக மம்முட்டி படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்... தமிழர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று கூறியவருக்கு ஹீரோயின் வாய்ப்பு - ரஜினி மகளை வெளுத்துவாங்கிய பிரபலம்

click me!