ஏப்ரல் 14 குரோதி தமிழ்ப் புத்தாண்டு.. ராகுவால் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்!

First Published Mar 21, 2024, 10:49 AM IST

இந்தாண்டு தமிழ்ப்புத்தாண்டில் ராகுவினால் சில ராசியினர் அசுபலன்களை பெறப்போகிறார்கள்.  அது எந்தெந்த ராசிகள் என்பதை குறித்து பார்க்கலாம்.

இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி 2024 குரோதி தமிழ்ப் புத்தாண்டு பிறக்க போகிறது. ஜோதிட சாஸ்திரம் படி, ராகு மற்றும் கேது உக்கிரமான கிரகங்களாகக கருதப்படுகிறது. மேலும் இவர்கள் இருவரும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தங்களது ராசியை மாற்றிக் கொள்வது வழக்கம்.

அந்தவகையில், ராகு மீனத்திலும், கேது கன்னி ராசியிலும் உள்ளது. 2003ஆம் ஆண்டு ராகு மற்றும் கேது வெவ்வேறு ராசியில் சஞ்சரித்தன. அதன் பிறகு தற்போது, அதாவது 21ஆண்டுகளுக்குப் பிறகு ராகு மற்றும் கேது வெவ்வேறு ராசியில் சஞ்சரிக்கிறது. இவர்கள் இருவரும் இதேபோலவே, 2025ஆம் ஆண்டு வரை மாறி மாறி பயணிப்பார்கள். இதனால் சில ராசியினர் கடுமையான துயரம் மற்றும் துன்பங்களை சிந்திப்பார்கள்.

இந்நிலையில், மீன ராசியில் சஞ்சரிக்கும் ராகு பகவானால் இந்தாண்டு புதிய தமிழ்ப்புத்தாண்டில் சில ராசியினருக்கு அசுப பலன்களை ஏற்படுத்தும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் எந்த ராசியினர் என்று தெரிந்துகொள்ளலாம்..

சிம்மம்: மீனத்தில் ராகு இருப்பதால் இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டில் சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் வேலை செய்யும் இடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்களை சுற்றி உள்ளவகளால் உங்களுக்கு கெடுபலன்கள் உண்டாகும். வாக்குவாதம் நடக்கும் இடத்தில் விலகி இருப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வரலாம். எனவே, எச்சரிக்கையாக இருங்கள். வியாபாரத்தில் மன உளைச்சல் ஏற்படலாம். செய்யும் காரியங்கள் தடைபடும்.

இதையும் படிங்க: குரோதி தமிழ் புத்தாண்டு: இனி கும்ப ராசியின் ஆட்டம் ஆரம்பம்! பிரமாண்டமான ராஜயோகம்!!

கும்பம்: மீனத்தில் ராகு இருப்பதால் இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டில் கும்பம் ராசிக்காரர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். கும்ப ராசிக்காரர்கள் பணியிடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் வீண் செலவுகள் வரும். எவ்வளவு சம்பாதித்தாலும் நமக்கு பணம் கையில் நிற்காது. வாகன விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம். இதனால் காயம் கூட உண்டாகலாம். குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் வந்து கொண்டே இருக்கும். முக்கியமான முடிவுகளை நீங்கள் எடுப்பதில் சிரமம் ஏற்படும்.

மீனம்: மீனத்தில் ராகு இருப்பதால் இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டில் மீனம் ராசிக்காரர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். கேதுவின் தாக்கமும் இருக்கும். திடீர் சிக்கலில் சிக்கலாம். எனவே, கவனமாக இருங்கள். வீண் சண்டைகள் வரும். இதனால் டென்ஷன் கூடும். செய்யும் 
தொழிலில் நஷ்டம் வராமல் இருக்க, புதிய முதலீடுகளை செய்ய வேண்டாம். இல்லையெனில், பெரும் நஷ்டத்தை சந்திப்பீர்கள் ஜாக்கிரதை..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!