Kizhakku Vaasal: கொண்டாட்டத்தில் விஜய் டிவி 'கிழக்கு வாசல்' சீரியல் குழு! வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்..!

First Published Dec 21, 2023, 3:14 PM IST

கிழக்கு வாசல் சீரியல் வெற்றிகரமாக 100-ஆவது எபிசோடை எட்டியுள்ளதை தொடர்ந்து ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
 

ராதிகா சரத்குமார் தயாரிப்பில், இயக்குனர் எம் என் மனோஜ் குமார் இயக்கி வரும் சீரியல் கிழக்கு வாசல். இதில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அபி டெய்லர்' தொடர் மூலம் பிரபலமான ரேஷ்மா முரளிதரன் கதாநாயகியாக நடிக்க, வெங்கட் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வருகிறார்.

மிக முக்கிய கதாபாத்திரத்தில் தளபதி விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் நடிக்கிறார். மேலும் சிந்து ஷாம், ஜானகி சுரேஷ், அருண்குமார் ராஜன், அஸ்வினி ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

Kanaka: என்னை நம்ப வச்சு ஏமாற்றிய கனகா! அப்போ ஒன்னு சொல்லிட்டு இப்போ அந்தர் பல்டி... குமுறிய குட்டி பத்மினி!

இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த சீரியல், நடிகை ரேஷ்மா முரளிதரனை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. சூழ்நிலை காரணமாக பாஞ்சாலிக்கு பிறந்த ரேணுகாவை அவரின் தாயார் கோவிலில் கொண்டு வந்து போட... அது மெக்கானிக்கான சுவாமி அப்பன் கையில் கிடைக்கிறது. பின்னர் சாமி அப்பனும்,சிவகாமியும், தங்களுக்கு மகள் இல்லாத குறையை தீர்த்துக் கொள்ள ரேணுகாவை சொந்த மகள் போல் செல்லமாக வளர்கின்றனர். அதே நேரம் ரேணுகா தத்து மகள் என்பதால் பலரால்  நோகடிக்கப்படுகிறார்.

பல எதிர்ப்புகளை மீறி, சட்டக் கல்லூரியில் ரேணுகா சேரும் நிலையில்... அவரை படிக்க விடாமல் செய்யும் விதமாக ரேணுகாவின் மாமா தயாளன், அவரை தன்னுடைய மகன் அர்ஜூனுக்கு திருமணம் செய்து வைக்க முயல்கிறார். பின்னர் அந்த திருமணத்தை அவரே சில சூழ்ச்சி செய்து நிறுத்துகிறார். இதனால் அர்ஜுன்- ரேணுகா திருமணம் தடைபடுகிறது. ரேணுகா திருமணத்திற்காக பல லட்சங்களை சாமியப்பன் தன்னுடைய வீட்டை அடமானம் வைத்து பெற்ற நிலையில், தற்போது அதனை எப்படி மீட்பது என தவிக்க.. இவரின் மகன் நடேசன் தன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் சூதாட்டத்திலும் சொத்து வாங்குகிறேன் என்று கோட்டை விடுகிறார்.

Bigg Boss Lovers: மணி - ரவீனாவுக்கு இடையே இத்தனை வயசு வித்தியாசமா? ஷாக்கான மணியின் அம்மா!

மேலும் ரேணுகா உடன் திருமணத்தை நிறுத்திய அர்ஜுனனுக்கு, பாஞ்சாலியின் இன்னொரு மகளான அனுவுக்கும், அர்ஜுனனுக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. எனினும் அர்ஜூனுடன் தான் தனக்கு திருமண நடைபெற இருந்தது என்பதை ரேஷ்மா வெளிப்படையாக கூறுவாரா? இந்த திருமணம் நடக்குமா? நடக்காதா என்கிற பரபரப்பான கதைக்களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியல் தற்போது டிஆர்பிஎல் சற்று பின்தங்கி இருந்தாலும், பலரின் ஃபேவரட் சீரியலாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியல் வெற்றிகரமாக 100-ஆவது எபிசோடை எட்டி உள்ளதை சீரியல் குழுவினர் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை சீரியல் குழுவினருக்கு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!