Karthigai deepam serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா தூக்கி வீசிய மாத்திரை அட்டை தீபா கையில் கிடைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது தீபா, அந்த அட்டையை கொண்டு வந்து மீனாட்சியிடம் காட்ட அவள் இது பீரியட்டை தள்ளி போடுவதற்கான மாத்திரை, அப்படினா ஐஸ்வர்யா கேம் விளையாடிட்டு இருக்கா போல என்று சந்தேகப்படுகின்றனர்.
Zee Tamil Karthigai deepam serial
பிறகு மீனாட்சி அவ வழக்கமா போற ஹாஸ்பிடலில் எனக்கு தெரிந்த நர்ஸ் ஒருத்தி இருக்கா, அவளை வைத்து உண்மையை கண்டுபிடிக்கலாம் என்று பிளான் போடுகின்றனர். அதன் பிறகு ஐஸ்வர்யாவை அந்த ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்று வழக்கமான செக்கப் போல் பரிசோதனை செய்து ப்ளட் டெஸ்ட் எடுத்து பார்க்க, ஐஸ்வர்யா கர்ப்பம் இல்லை என்ற விஷயம் தெரிய வருகிறது, இந்த ரிப்போர்ட்டுடன் வீட்டிற்கு வந்த தீபா ஐஸ்வர்யா ரூமுக்குள் சென்று நீ கர்ப்பம் இல்ல தானே என்று கேட்க, ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள்.
இதையும் படியுங்கள்... கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம போச்சே... ஸ்டார் படத்தில் கவினுக்கு முன் ஹீரோவாக நடிக்க இருந்தது இந்த நடிகரா?
Karthigai deepam serial Update
இருந்தாலும் நான் கர்ப்பமாக தான் இருக்கேன், நீ என்ன எதோ உளறிட்டு இருக்க என்று சமாளிக்க முயற்சி செய்கிறாள். தீபா நான் ஆதாரத்தோடு தான் வந்து கேட்கிறேன், உண்மையை சொல்லு என்று கேட்க இதையெல்லாம் ஒட்டு கேட்ட ரியா அபிராமியிடம் சென்று நீங்க என்கிட்டே பேச மாட்டிங்கனு தெரியும். தீபாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் ஏதோ பிரச்சனை, அதை தீர்த்து வையுங்கள் என்று சொல்லி கொளுத்தி போடுகிறாள்.