Kanyakumari News
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (46). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர். சுரேஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கத்தால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி பிரிந்து சென்று விட்டார். அவருடன் இரண்டாவது மகளும், சுரேஷ் குமாருடன் முதல் மகள் ஆர்த்தியும் வசித்து வந்தனர்.
illegal Love Murder
இதனிடைய நேற்று சுரேஷ்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைக்கப்பெற்றது. அதில் சுரேஷ்குமார் இயற்கைக்கு மாறாக கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சுத் திணறலால் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து மகள் ஆர்த்தியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
daughter Arrest
அதன்படி சம்பவத்தன்று சுரேஷ்குமாருக்கு அளவுக்கு அதிகமாக மது வாங்கி கொடுத்து மட்டையாக்கி மகள் ஆர்த்தியும் கள்ளக்காதலன் சுரேஷ்பாபுவும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அதன்பின் காலையில் தந்தை உயிரிழந்து விட்டதாக அருகில் உள்ளவர்களிடம் மகள் ஆர்த்தி கூறிய நிலையில் மது போதையில் தந்தை உயிரிழந்ததாக நாடகம் ஆடியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து மகள் ஆர்த்தி மற்றும் சுரேஷ்பாபு இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.