55 வயது மாமியாரை மடக்கிய மருமகன்! திருமணம் செய்து கொண்டதால் மாமனார் அதிர்ச்சி! நடந்தது என்ன?

First Published May 2, 2024, 11:25 AM IST

பீகாரில் திருமணமான நபர் தன் மாமியாரை 2வது திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

illegal love

பீகார் மாநிலம் பாட்னாவை அடுத்துள்ள பங்காவில் உள்ள ஹீர் மோதி கிராமத்தை சேர்ந்தவர் சிக்கந்தர் யாதவ் (45). இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மனைவி இறந்துவிட்ட நிலையில்  மாமனார், மாமியாருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், 55 வயதாகும் மாமியார் கீதாவுக்கும்  மருமகன் சிக்கந்தருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

bihar news

இந்த விவகாரம் நாளடைவில் மாமனார் திலேஷ்வர் தர்வேவுக்கு தெரியவந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்தார். இவ்விவகாரம் தொடர்பாக பஞ்சாயத்துக்குத் தெரிவித்தார். 

Man Marries Mother-In-Law

இதனையடுத்து கிராம மக்கள் முன்னிலையில் சிக்கந்தர் தனது மாமியாருடன் இருந்த கள்ளத்தொடர்வை ஒப்புக்கொண்டார். பின்னர், அனைவரின் முன்னிலையில் சிக்கந்தர் மற்றும் கீதாவைப் பிடித்து 2வது திருமணம் செய்து வைத்தனர். இதுதொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

click me!