தாயுடன் உல்லாசம்! இடையூறாக இருந்த 6 வயது சிறுமி துடிதுடிக்க கொலை? நடந்தது என்ன? போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை!

First Published Apr 24, 2024, 9:04 AM IST

உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் சிறுமி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் தாய் மற்றும் கள்ளக்காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Crime

சென்னை வியாசர்பாடி பி.வி காலனியை சேர்ந்தவர் திவ்யா (31). இவரது முதல் கணவர் விஜயகாந்த். இவர்களுக்கு 9 வயதில் மகனும், 6 வயதில் தேஜஸ்வி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக கணவரை பிரிந்து திவ்யா புழல் காந்தி 2வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். 

Illegal love

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த திவ்யாவுக்கு அவருடன் பணியாற்றி வந்த  சீனிவாசன் (31) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஆனால்,  இவர்கள் உல்லாசமாக இருப்பதற்கு சிறுமி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

Child Girl Murder

இந்நிலையில், பாசமாக சிறுமி தேஜஸ்வியை குளிக்க வைப்பதற்காக சீனிவாசன் குளியல் அறைக்கு அழைத்து சென்றுள்ளார். சிறிது நேரத்தில், சிறுமி மயங்கி விட்டதாக கூறிய சீனிவாசன் தனது தோளில் சிறுமியை போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Chennai Police

பின்னர், சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்து சீனிவாசன் மற்றும் திவ்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே சிறுமி கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து தெரியவரும். 

click me!