Samantha: கேக் முன்பு கண்களை மூடி அமர்ந்திருக்கும் அழகு சிலை.! சமந்தாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

First Published Apr 29, 2024, 2:58 PM IST

நடிகை சமந்தா நேற்று தன்னுடைய 37-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், இவரது பர்த்டே ஸ்பெஷல் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
 

சென்னையில் உள்ள பல்லாவரத்தில் பிறந்து, பாலிவுட் வரை சென்று  பலர் பொறாமைப்படும் அளவுக்கு தன்னுடைய கேரியரில் வளர்ந்து நிற்பவர் நடிகை சமந்தா. இவர் நேற்று தன்னுடைய 37-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், இதுகுறித்த கியூட் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதையே தன்னுடைய ஒரே கனவாக வைத்திருந்தவர் சமந்தா. பார்ட் டைம் வேலை செய்து கொண்டே... பல புரோடக்ஷன் கம்பெனிகளில் ஏறி இறங்கி வாய்ப்பு கேட்டது மட்டும் இன்றி, பல ரிஜெக்ஷன்களையும் சந்தித்துள்ளார். அந்த சமயத்தில் தான் இயக்குனர் கெளதம் மேனன், தான் இயக்கிய 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு வர்ஷனில் இவருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

Radha: சுந்தரா ட்ராவல்ஸ் நடிகை ராதா தாக்கியதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி! போலீசில் பரபரப்பு புகார்!
 

இப்படத்தின் வெற்றி சமந்தாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. தமிழிலும் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சமந்தா, அதர்வா ஹீரோவாக அறிமுகமான பானா காத்தாடி படத்தில் ஹீரோயினாக நடித்து, இளம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
 

இதை தொடர்ந்து மாஸ்க்கோவின் காவிரி, நான் ஈ, நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான், கத்தி, தெறி, போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருந்த சமந்தா, தன்னுடைய முதல் பட நாயகனான நாக சைதன்யாவை கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Radha: சுந்தரா ட்ராவல்ஸ் நடிகை ராதா தாக்கியதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி! போலீசில் பரபரப்பு புகார்!
 

இவர்களின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்தது. நாக சைதன்யா ஒரு இந்தி என்பதால் இவர்களின் திருமணம் இந்து முறைப்படியும், சமந்தாவின் குடும்ப வழக்கப்படி கிருஸ்தவ முறைப்படியும் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பின்னர் இணை பிரியாத நட்சத்திர ஜோடியாக வந்து பலரை ஆச்சரியப்படுத்திய இந்த ஜோடி, கடந்த 2021-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிவதாக கூறி அதிர்ச்சி கொடுத்தது.
 

விவாகரத்து முடிவுக்கு பின்னர், திரையுலகில் மட்டும் நாடியகை சமந்தா கவனம் செலுத்தி வந்தாலும்... மயோசிட்டிஸ் பிரச்சனை காரணமாக பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தார். தற்போது உரிய சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் உடல் நலன் தேறி நடிப்பில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.

Dhivya Duraisamy : இப்போ பிளாக் ட்ரெண்டிங் போல.. தாராள கவர்ச்சியில் நடிகை திவ்யா துரைசாமி - Latest Photos!
 

இது ஒருபுறம் இருக்க, நேற்று நடிகை சமந்தா தன்னுடைய 37-ஆவது பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடினார். அவர் கேக் முன்பு அமர்ந்து கண்ணை மூடி கொண்டு அழகிய சிலை போல் அமர்ந்திருக்கும் போட்டோ தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

click me!