பிரியா பவானி ஷங்கர் முதல் லாஸ்லியா வரை.. செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக மாறியவர்கள் யார் யார் தெரியுமா?

First Published Apr 9, 2024, 1:52 PM IST

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பிரபலமாகி, பின்னர் நடிகையாக மாறிய முக்கிய பிரபலங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 

சமீப காலமாக சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக பார்க்கப்பட்டு வருகின்றனர் சின்னத்திரை நடிகர், நடிகைகள், மற்றும் செய்தி வாசிப்பாளர்கள். இப்படி செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமாகி, திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று... தன்னுடைய திறமையால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த, ஒரு சில பிரபலங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 

செய்தி வாசிப்பாளராக இருந்து முன்னணி நடிகையாக மாறியவர் என்று சொன்னதுமே, பலருடைய நினைவுக்கும் முதலில் வருபவர் ப்ரியா பவானி சங்கர் தான். ஆனால் இவர் நேரடியாக வெள்ளித்திரையில் அறிமுகமாகாமல், ஆரம்பத்தில் 'கல்யாண முதல் காதல் வரை' என்கிற விஜய் டிவி சீரியலில் நடித்து அதன் பின்னரே, இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான... 'மேயாத மான்' படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். 

Anna Serial: அண்ணா சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய நடிகை! இது தான் காரணமாம்?

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பிரியா பவானி சங்கருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றுத்தந்தது. அந்த வகையில் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஹாஸ்டல், ருத்ரன், திருச்சிற்றம்பலம், யானை, என வரிசையாக பல படங்களில் நடித்து, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தற்போது இவரின் கைவசம் சுமார் அரை டஜனுக்கும் அதிகமான படங்கள் உள்ளன. கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உயர்ந்துள்ளார் ப்ரியா பவானி சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

Losliya Mariyanesan

இவரைத் தொடர்ந்து செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் நடிகையாக மாறியவர்களில் ஒருவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த இவருக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்த நிலையில், இதை தொடர்ந்து பிரண்ட்ஷிப் என்கிற படத்தில் அறிமுகமானார். இவர் நடித்த படங்கள் எதுவும் சொல்லிகொள்ளுபடி வெற்றிபெறாத நிலையில், தற்போது வரை சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க போராடிவரும் லாஸ்லியா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, திரைப்படங்களுக்கு கொக்கி போட்டு வருகிறார்.

Karthigai Deepam: உயிரோடு புதைக்கப்பட்ட அபிராமி! அம்மாவை காப்பாறுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபம் அப்டேட்!
 

நடிகை லாஸ்லியா போலவே, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பின்னர் நடிகையாக உயர்ந்தவர் அனிதா சம்பத். இவருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும்,  திரைப்படங்களில் ஹீரோவுக்கு தங்கை, மருத்துவர் போன்ற குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அதேபோல் செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது பல ரசிகர்களின் மனதை வருடும் கதாநாயகிகளில் ஒருவராக மாறி உள்ளவர் திவ்யா துரைசாமி. இன்ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில், சிறு சிறு வேடத்தில் நடித்த திவ்யா... பின்னர் ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் படத்தில், இவரது கதாபாத்திரம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள வாழை திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சௌந்தரபாண்டியை அந்தரத்தில் தொங்க விட்ட ஷண்முகம்! முத்துப்பாண்டி செய்யும் அடுத்த சதி - அண்ணா சீரியல் அப்டேட்!

செய்திவாசிப்பாளர் சரண்யா துரடியு, ஒரு சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, மிருனா போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறி விட்டது. எனவே சீரியல் பக்கம் ஒதுங்கினார். திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து விலகியே இருந்த சரண்யா, மீண்டும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல் மூலம் சின்னத்திரையில் கம் பேக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!