ரஜினி, கமலுடன் நடித்த நடிகருக்கு இவ்வளவு கடனா.. இந்த தமிழ் நடிகர் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காரா..

First Published Apr 20, 2024, 6:48 PM IST

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோருடன் நடித்த நடிகர் 4 முறை கடனாளியாகி திரையுலகி விட்டு விலகி இருந்தார். அந்த நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா?

வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு வெற்றி பெற்றாலும், உங்கள் கால்களை தரையில் உறுதியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அடிக்கடி சொல்லப்படுகிறது. அதாவது தலைக்கனம் வராமல் அடக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதே அதன் பொருள். சினிமாவில் ஒருவர் இருவரல்ல, நூற்றுக்கணக்கானவர்கள், தங்கள் கேரியரில் ஒரு சிறு தவறை செய்துவிட்டு, அதை நினைத்து வாழ்நாள் முழுவதும் கவலைப்படுகிறார்கள்.

திரைத்துறைக்கு அனைவரும் நட்சத்திரம் ஆக வேண்டும் என்பதற்காகத்தான் வருகிறார்கள், ஆனால் அதனால் வரும் நட்சத்திர அந்தஸ்தை கையாள்வது அனைவரின் கையிலும் இல்லை. இந்த நடிகர் ஒரே இரவில் சூப்பர் ஸ்டாராக மாறிவிட்டார். ஆனால் அவர் திரையுலகில் இருந்து முற்றிலும் மறைந்து இப்போது பெயர் தெரியாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றே கூறலாம்.

இந்த நடிகர் ஒருமுறை இரண்டு முறை அல்ல 4 முறை கடனாளியாகி டாக்ஸி டிரைவராக வேலை செய்து பிழைப்புக்காக கழிவறைகளை சுத்தம் செய்துள்ளார். இந்த தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ஐஸ்வர்யா ராய் பச்சன், தபு, ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி போன்றவர்களுடன் பணிபுரிந்தார். ஆனால் இன்று அவர் புகழ் வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார்.'முஸ்தபா முஸ்தபா' என்ற பாடலை கேட்காதவரே இல்லை என்றே கூறலாம்.

இந்தப் பாடலில் நடித்திருந்த நடிகர் அப்பாஸ் என்ற மிர்சா அப்பாஸ் அலி தான் அந்த நடிகர். நடிகர் அப்பாஸின் தந்தை அவரை என்ஜீனியராக்க விரும்பினார். அவரும் ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், 1994-ம் ஆண்டு பெங்களூரில் மாடலிங் போட்டி நடைபெறப் போவதாகத் தெரிய வந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதே அவரது திரையுலக வாழ்க்கையின் ஆரம்பம்.

நடிகர் அப்பாஸ் மாடலிங்கில் இறங்கினார். ஆனால் 1995 ஆம் ஆண்டில், அவரது நண்பர் ஒருவர் அவரை ஒரு தமிழ் படத்திற்கான ஆடிஷனுக்குச் செல்லும்படி கூற, அவர் அந்த படத்தில் நடிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுதான் 1996இல் வெளியான 'காதல் தேசம்' திரைப்படம். இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. அப்பாஸ் ஒரே நாளில் பிரபலமானார் என்றே கூறலாம்.

இதற்குப் பிறகு பல திரைப்பட வாய்ப்புகளைப் பெற்ற அவர் ஐஸ்வர்யா ராய் பச்சன், ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி போன்ற ஜாம்பவான்களுடன் பணியாற்றினார். இருப்பினும், சில காலத்திற்குப் பிறகு அவரது வாழ்க்கையின் மோசமான கட்டமும் தொடங்கியது. அவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. இதனால் கடனாளியானார்.

2015-க்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு நியூசிலாந்திற்குச் சென்றார். இதுபற்றி கூறிய அவர், "எனது குடும்பத்திற்கு உதவ, நான் ஒரு பைக் மெக்கானிக்காக வேலை செய்தேன். கழிப்பறைகளை சுத்தம் செய்தேன். மேலும் நியூசிலாந்தில் டாக்சிகளை ஓட்டினேன்” என்று தனது வாழ்க்கையின் மற்றொரு பக்கத்தை வெளிப்படுத்தினார்.

தற்போதைய நிலவரப்படி, அப்பாஸ் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தன்னம்பிக்கை அளிக்கும் பேச்சாளராக பணியாற்றி வருகிறார். அவரது திரையுலக வாழ்க்கையில், அப்பாஸ் படையப்பா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஹே ராம், ஆனந்தம் மற்றும் மின்னலே போன்ற பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளார்.

Bank Locker Rule: வங்கியில் லாக்கர் பயன்படுத்துகிறீர்களா.? இந்த ரூல்ஸ் எல்லாம் மாறிப்போச்சு.. நோட் பண்ணுங்க!

click me!