இந்த கல்யாணம் நடந்தே தீரும்.. குணசேகரன் பேச்சால் வெடிக்கும் பிரச்சனை? பரபரப்பான எதிர்நீச்சல் புரோமோ!

First Published Mar 19, 2024, 3:00 PM IST

எதிர்நீச்சல் சீரியலில் நாளுக்கு நாள், எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், இன்றைய ப்ரோமோ குறித்த அப்டேட் இதோ..
 

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. தன்னை படிக்காதவன் என ஒரு பெண் கூறிய கோவத்தை மனதில் வைத்து கொண்டு, படித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்து, அவர்களை வீட்டிலேயே அடக்கி வைக்கும் ஆணாதிக்கம் பிடித்த குணசேகரன் என்பவரை பற்றியும், இதை துணிச்சலாக எதிர்த்து நிற்கும்... குணசேகரனின் தம்பி மனைவியான ஜனனியையும் மையமாக வைத்து எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இது நாள்வரை மற்றவர்கள் மேல், தன்னுடைய கோபத்தை காட்டிய குணசேகரன். தற்போது தன்னுடைய குடும்பத்தின் மீதும் வெறுப்பை கொட்டி வருகிறார். ஏற்கனவே தன்னுடைய சுயநலத்திற்காக மனைவி ஈஸ்வரியை தள்ளி வைத்துள்ள குணசேகரன், தன்னுடைய மகளையும் கடத்தி வைத்து சித்ரவதைக்கு ஆளாக்கியது, பரபரப்பை ஏற்படுத்தியது.

கடுப்பான கூல் சுரேஷ்! மன்னிப்பு கேட்ட விசித்ரா! உதாசினம் செய்த தினேஷ்.. பிக்பாஸ் கொண்டாட்டத்தில் நடந்த களோபரம்

தற்போது ஒருவழியாக தர்ஷினியை காட்டில் இருந்து மீட்ட போலீஸ்... மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மெல்ல மெல்ல தர்ஷினி குணமாகி வருகிறார். மேலும் தர்ஷினியை நான் தான் பார்த்து கொள்வேன் என பாசம் மிகுந்த தந்தை போல் நடிக்கும் குணசேகரன் சாயம் எப்போது வெளுக்கும் என்கிற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

நேற்றைய எபிசோடிலேயே... திருமணம் குறித்து கரிகாலன் பேச, சக்தி அதற்க்கு மிகவும் கோவப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கதிர் - கரிகாலன் இடையே பிரச்சனை முட்டிக்கொள்கிறது. அண்ணன் குணசேகரனிடம், கரிகாலனை வெளியே அனுப்ப சொல்லி கதிர் கேட்க, அதற்க்கு அவர் அனுப்ப முடியாது!! இந்த கல்யாணம் நடந்தே தீரும் என கூறுகிறார். 

நான் மட்டும் நயன்தாராவுக்கு சளைத்தவளா என்ன? தரம் பிரித்து... லிஸ்ட் போட்டு.. கோடியில் கல்லா கட்டும் சமந்தா!

ஏற்கனவே அண்ணன் மீது கோவத்தில் இருக்கும் கதிருக்கு, இந்த வார்த்தை மேலும் அதிர்ச்சியை கொடுக்கிறது. மேலும் இதில் குழந்தை திருமணம் குறித்த கான்செப்ட் தற்போது பேசப்படுவதால், லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்படும் ஒரு சீரியலில்... இப்படி குழந்தை திருமணம் குறித்து கட்டப்படுவதற்கு நெட்டிசன்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. பலர் நேரடியாக தங்களின் கண்டனங்களையும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

click me!