'ரம்ஜான்' இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகளில் ஒன்றாகும். இது 'ரமலான்' பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது. பலர் இந்த பண்டிகையை 'ஈகைத் திருநாள்' என்றும் கூறுவர்.. பிறருக்கு உதவும் நோக்கத்தோடு இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு இந்தியாவில், ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் 11ஆம் தேதி, அதாவது நாளை வியாழன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
இப்போது ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் நேரம் வந்துவிட்டது. இந்நிலையில், ரம்ஜான் பண்டிகைக்கு மெஹந்தி போடும் போது மெஹந்தி சிவக்க, சில இயற்கையாக குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும். அது என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
கைகளை கழுவவும்: உங்கள் கையில் மெஹந்தி போடுவதற்கு முன் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். எனவே, கைகளை சோப்பு போடு நன்கு கழுவி கொள்ளுங்கள். பிறகு மெஹந்தி போட்டால் நன்றாக இருக்கும்.
மாய்ஸ்சரைசர் யூஸ் பண்ணாதீங்க: கைகளை கழுவிய பின் மாய்ஸ்சரைசரை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் மாய்ஸ்சரைசர்களில் உள்ள ரசாயனங்கள் கையில் மெஹந்தி சிவப்பாக மாறாமல் தடுக்கும். எனவே, அதை தவிர்ப்பது நல்லது.
கிராம்பு: அதுபோல, கிராம்பு மெஹந்தி நிறத்தை சிவப்பாக மாற்ற பெரிதும் உதவுகிறது. இதற்கு கடாயை எடுத்து அதில் கிராம்பு போட்டு வதக்கவும். அதிலிருந்து புகை வரும்போது மருதாணி போட்ட கைகளை அதில் காட்டவும். இப்படி காட்டினால் உங்கள் கை நல்ல சிவப்பாக மாறும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D