ஓட்டல் அறையில் வைத்து ஓங்கி விழுந்த அடி... அஜித்தை அவமானப்படுத்திய பாலா..! கோலிவுட்டின் பிளாஷ்பேக் சம்பவங்கள்

First Published Oct 14, 2023, 1:58 PM IST

நான் கடவுள் படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆன அஜித், இயக்குனர் பாலா உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அதில் இருந்து விலகியதன் பின்னணி பற்றி பார்க்கலாம்.

Ajith, director bala

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாது இயக்குனர்களில் ஒருவர் பாலா. சேது படத்தில் தொடங்கிய இவரது பயணம் தற்போது வணங்கான் வரை வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விக்ரம், சூர்யா, ஆர்யாவுக்கு வாழ்க்கை கொடுத்ததே பாலாவின் படங்கள் தான். அவர் இயக்கத்தில் நடித்த பின்னரே அவர்களுக்கு பெயரும் புகழும் கிடைத்தது. சேது மூலம் விக்ரமையும், நந்தா மூலம் சூர்யாவையும், நான் கடவுள் மூலம் ஆர்யாவையும் தரமான நடிகர்களாக செதுக்கிய பெருமை பாலாவையே சேரும்.

ajith, Arya

இயக்குனர் பாலாவின் திரையுலக பயணத்தில் மறக்க முடியாத படங்களில் ஒன்று நான் கடவுள். இப்படத்தில் முதன்முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது அஜித் தான். இதற்கு தீவிரமாக தயாராகி வந்த அஜித், ஒரு கட்டத்தில் இயக்குனர் பாலா உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அப்படத்தில் இருந்து விலகிவிட்டார். அந்த சமயத்தில் ஓட்டல் அறையில் நடந்த மோதலில் இயக்குனர் பாலா அஜித்தை அடித்துவிட்டதாக பரவலாக பேசப்பட்டது. அது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

director bala vs Ajith

இந்நிலையில், நான் கடவுள் பட சமயத்தில் ஓட்டல் அறையில் நடந்த விஷயங்களை பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். அதன்படி, நான் கடவுள் படத்தில் நடிக்க கமிட் ஆன பின்னர் அப்படத்திற்காக அஜித்திடம் தலைமுடியை நீளமாக வளர்க்க சொன்னாராம் பாலா. அதோடு தன்னிடம் கேட்காமல் முடியை வெட்டக்கூடாது என்றும் கட்டளையிட்டு இருந்தாராம். இப்படி அப்படத்திற்காக அஜித் நீண்ட நாட்களாக காத்திருக்க, ஷூட்டிங்கும் தாமதம் ஆகி இருக்கிறது.

எப்போ தான் ஆரம்பிக்க போறீங்க என கேட்க, அப்படத்தின் கதை விவாதம் நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்துவந்ததை அறிந்த அஜித் அங்கு சென்றாராம். இயக்குனர் பாலா மற்றும் அவருக்கு நெருக்கமான சிலரும் அங்கு இருந்திருக்கிறார்கள். அஜித்திடம் ஆரம்பத்தில் இருந்தே பாலா கதை சொல்லாமல் இருந்ததால், அந்த சந்திப்பின் போது ஸ்கிரிப்ட் சொல்லாவிட்டாலும், ஒன்லைனாவது சொல்லுங்கள் என கேட்டுள்ளார் ஏகே. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

director bala Ajith fight

இதற்கு நக்கலாக சிரித்தபடி, அதான் அகோரி கதைனு சொன்னனே என கூறி இருக்கிறார் பாலா. அவர் சொன்ன முறை அஜித்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். உடனே அஜித்தின் முடியை பார்த்து, இதெல்லாம் யாரைக்கேட்டு வெட்டுனீங்க என கேட்டிருக்கிறார் பாலா. இப்படி ஒவ்வொரு விஷயமாக விவாதம் முற்றிப்போக இது வேலைக்கு ஆகாது என கிளம்பி இருக்கிறார் அஜித். அப்போது அஜித்தின் கையை பிடித்து உட்கார வைத்த பாலா, அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

Naan Kadavul issue

இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நேரத்தில் அங்கிருந்த மற்றொரு நபர், அஜித்தின் முதுகில் ஓங்கி அடித்திருக்கிறார். நீ என்ன பெரிய ஹீரோவா உட்காருயா என சொல்லி அந்த நபர் முதுகில் அடித்ததும் ஷாக் ஆகிப்போன அஜித், அங்கிருந்து வெளியே வந்து 20 நாட்கள் யாரிடமும் பேசாமலேயே இருந்துள்ளார். மிகப்பெரிய அவமானத்தால் அஜித் மிகவும் வேதனையுடனே இருந்து வந்திருந்தாராம். அந்த சமயத்தில் கூட, இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் இது பெரிதானால் பாலா போன்ற நல்ல இயக்குனருடைய லைஃப் வீணாகிவிடும் என மீடியாவிடம் மறைமுகமாக அஜித் கேட்டுக்கொண்டதாக செய்யாறு பாலு கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... லியோவை டீலில் விட்டு... தீபாவளி ரிலீஸ் படத்தை கொத்தாக தூக்கிய ரெட் ஜெயண்ட்ஸ் - மாஸ் சம்பவம் லோடிங்

click me!