Power Shutdown in Chennai: அட கடவுளே.. இன்னைக்குனு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?

First Published May 4, 2024, 6:25 AM IST

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை புழல், சூரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

power cut

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

Chennai Power Shutdown

புழல், விநாயகபுரம் மற்றும் சூரப்பட்டு: 

புழல் பகுதி முழுவதும், சூரப்பட்டு முழுவதும், சண்முகபுரம், நாகப்பா எஸ்டேட், காவாங்கரை, காந்தி மெயின் ரோடு, சக்திவேல் நகர், காவாங்கரை ஒரு பகுதி, கே.எஸ்.நகர், மகாவீர் கார்டன், திருநீலகண்டன் நகர், ரெட்ஹில்ஸ், அம்பத்தூர் சாலை, புழல் சிறை 1,2,3, மற்றும் புழல் குவார்ட்டர்ஸ், விநாயகபுரம், சூரப்பேட்டை மெயின் ரோடு, செம்பியம் சாலை, புழல் மெட்ரோ வாட்டர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!