New Marriage Couple
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி - லட்சுமிபுரத்தைச் சேர்ந்த மதி. இவரது மனைவி ராதா. இந்த தம்பதியின் 2வது மகள் சிநேகா(19). இவருக்கும் மேலூரை அடுத்துள்ள கோவில்பட்டியைச் சேர்ந்த மகேஷ் என்பவருக்கு கடந்த 22-ம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், பழ வியாபாரம் செய்து வரும் மகேஷ், தனது மனைவி சிநேகா மற்றும் மகேஷின் தாயுடன் அவர்களுக்கு சொந்தமான புதிய வீட்டில் வசித்து வந்தனர்.
Police investigation
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் மூலம் சிநேகாவை மீட்டு மேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிநேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.