சமைக்க எவ்வளவு நேரம்? ஆத்திரத்தில் தாயை கம்பியால் அடித்து கொன்ற 17 வயது மகன்!இறுதியில் என்ன செய்தார் தெரியுமா?

First Published Feb 4, 2024, 8:47 AM IST

பெங்களூருவில் காலை உணவு சமைத்துக் கொடுக்க தாமதமானதால் தாயை இரும்புக் கம்பியால்   17 வயது மகன் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Son Kills Mother

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புராவில் உள்ள நீதிபதி பீமய்யா லேஅவுட்டில் வசித்து வந்தவர் நேத்ராவதி (40). இவரது 17 வயது மகன் தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்துள்ளார். இந்நிலையில், தாயுடன் ஏற்பட்ட தகராறில் இரவு சாப்பிடாமல் தூங்க சென்றுவிட்டார். மறுநாள் காலையில் கல்லூரிக்கு அவசர அவசரமாக கிளம்பிய போது காலை உணவு தயாராக இல்லாததால் ஆத்திரமடைந்த மகன் தாய் நேத்ராவை இரும்பு கம்பியால் தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக தாக்கியுள்ளார். 

Iron Rod

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த தாய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து மகன் தாயை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டதாக கூறி கே.ஆர்.புரா காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நேத்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

bengaluru Crime

இந்த கொலை சம்பவம் தொடர்பாக அவரது மகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உணவு சமைத்துக் கொடுக்க தாமதமானதால் பெற்ற தாயை மகனே இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!