நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் அதிர்ச்சி சம்பவம்.. துடிதுடித்து பலியான சிறுவன் யார் தெரியுமா? நடந்தது என்ன?

First Published Feb 12, 2024, 11:48 AM IST

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கூடைப்பந்து பயிற்சியின் போது மின்சாரம் தாக்கி 6ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ymca Ground

சென்னை மயிலாப்பூர் டிசெல்வா சாலையை சேர்ந்தவர்கள் தயாள் சுந்தரம். இவரது மனைவி கீதா பிரியா. மருத்துவரான இருவரும் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களது மகன் ரியான் ஆதவ் (10). ஆர்.ஏ.புரத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். கூடைப்பந்து விளையாட்டில் மிகவும் ஆர்வமாக இருந்ததால் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கூடைப்பந்து விளையாட்டு பயிற்சியில் பெற்றோர் சேர்த்துள்ளனர்.

School Student

தினமும் ஒய்எம்சிஏ மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அதன்படி நேற்று முன்தினம் வழக்கம் போல பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது மைதானத்தில் தனியார் பள்ளியில் நிகழ்ச்சிக்காக தரை வழியே பாதுகாப்பற்ற முறையில் மின்சாரம் கொண்டு சென்றுள்ளனர். அப்போது கூடைப்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவன் ரியான் ஆதவ் மீது அங்கிருந்த மின் ஓயரில் கசிவு ஏற்பட்டு  மின்சாரம் பாய்ந்தது. 

chennai police

இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனையடுத்து பயிற்சி இருந்தவர்கள் அவரை மீட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெற்றோர் பணியாற்றும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து சைதாப்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!