baakiyalakshmi serial
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரித்திகா தமிழ் செல்வி. அந்த சீரியலில் வினோதினி என்கிற கதாபாத்திரத்தில் அழகாக நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனதை கொள்ளைகொண்ட ரித்திகா, அடுத்ததாக சிவா மனசுல சக்தி, சன் டிவியில் சாக்லேட், திருமகள் போன்ற தொடர்களில் நடித்தார்.
rithika tamilselvi
இதையடுத்து விஜய் டிவியில் ஆரம்பமான பாக்கியலட்சுமி சீரியலில் அம்ரிதா என்கிற கேரக்டரில் நடிக்க கமிட் ஆனார் ரித்திகா. அந்த சீரியலில் எழிலுக்கு ஜோடியாக நடித்த இவர், அதனிடையே குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கினார். அந்நிகழ்ச்சியின் 2-வது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக பங்கேற்று தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தினார் ரித்திகா.
Serial Actress rithika tamilselvi
அதன்பின்னர் பாக்கியலட்சுமி சீரியல் படிப்படியாக பிக் அப் ஆகி டிஆர்பியில் சக்கைப்போடு போட்டு வந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு வினு என்பவரை காதலித்து கரம்பிடித்தார் ரித்திகா. இவர்களது திருமணம் கேரளாவில் சிம்பிளாக நடைபெற்றாலும் சென்னையில் கிராண்ட் ஆக நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
இதையும் படியுங்கள்... காதல் கணவருடன் தாஜ்மஹாலில் காதலர் தினத்தை கொண்டாடிய சீரியல் நடிகை ரித்திகா - வைரலாகும் போட்டோஸ்
rithika tamilselvi husband
திருமணத்துக்கு பின்னரும் சிரியலில் நடித்து வந்த ரித்திகா தமிழ் செல்வி, கடந்தாண்டு திடீரென அந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ரித்திகா. தற்போது ரித்திகாவுக்கு பதிலாக அம்ரிதா கேரக்டரில் அக்ஷிதா நடித்து வருகிறார்.
rithika tamilselvi pregnant
சீரியலில் இருந்து விலகினாலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் ரித்திகா அதில் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில் சமீபத்தில் காதலர் தினத்தையொட்டி ஆக்ரா சென்றிருந்த அவர் அங்கு தாஜ்மஹால் முன்பு போட்டோஷூட் நடத்தி இருந்தார். அந்த புகைப்படங்கள் வைரலாகின.