பல பிரபலங்களின் ஜாதகத்தை கணித்து கூறி... சோசியல் மீடியாவில் பிரபலமாகியுள்ள வேணு சுவாமி ராம் சரண் மகள் குறித்து கூறிய கருத்துக்கு டோலிவுட் ரசிகர்கள் பலர் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
அதே நேரம் தாமதமாக குழந்தை பெற்று கொள்வது கூட ஏற்கனவே நாங்க முடிவு செய்த ஒன்று தான் என கூறினார் உபாசனா. மேலும் உபாசனா தன்னுடைய கருமுட்டையை சேமித்து வைத்து அதன் மூலமே குழந்தை பெற்றெடுத்ததாகவும் தகவல்கள் பரவின.
ஜோதிடர் வேணு சுவாமி ராம் சரண் மகள் க்ளின் காரா ஜாதகத்தை கணித்து... அவர் மஹத் ஜாதகத்தில் பிறந்தவர் எனவே மகாராணியாக வாழும் அம்சம் கொண்டவர் என கூறியதை தொடர்ந்து பலர், ஒரு வயது கூட நிரம்பாத குழந்தையின் ஜாதகத்தை எப்படி நீங்கள் கணித்து கூறுவீர்கள் என இவரை திட்டி தீர்க்க துவங்கினர்.
உண்மையில் பாலாரிஷ்டம் உள்ள குழந்தைகளின் ஜாதகத்தை தான் பிறந்த உடனே சொல்லக் கூடாது. பாலாரிஷ்டம் உள்ள குழந்தைகளுக்கு 7 வயதுக்குள் பிரகண்டம் இருந்தால் ஜாதகத்தைச் சொல்லக்கூடாது என்கிறது சாஸ்திரம். மேலும் சில நக்ஷத்திரங்களில் பிறந்த குழந்தைகளுக்கு 7வது நாள், 7வது மாதம், 7வது வருடம், 17வது, 37வது மற்றும் 77வது வருடங்களில் பிரகண்டம் இருக்கும். என கூறி உள்ளார். இந்த தகவல் டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.