ராம் சரணின் மகள் க்ளின் காரா ஜாதகத்தை கணித்து கூறிய ஜோதிடர் வேணு சுவாமி! திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள் ஏன்?

First Published Apr 26, 2024, 11:48 PM IST

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பேரக்  குழந்தையும், ராம் சரண் - உபாசனா தம்பதியின் மகளுமான க்ளின்  காரா ஜாதகத்தை பிரபல ஜோதிடர் வேணு சுவாமி கணித்து கூறியதை தொடர்ந்து அவரை டோலிவுட் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.
 

பல பிரபலங்களின் ஜாதகத்தை கணித்து கூறி... சோசியல் மீடியாவில் பிரபலமாகியுள்ள வேணு சுவாமி ராம் சரண் மகள் குறித்து கூறிய கருத்துக்கு டோலிவுட் ரசிகர்கள் பலர் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
 

ராம் சரண் - உபாசனா தம்பதி, திருமணமாகி பத்து வருடங்களுக்குப் பிறகு அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். டிசம்பர் 2022 இல் உபாசனா தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார். பல வருடங்களுக்கு பின் உபாசனா கர்ப்பமான தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

Jyotika: ஜோதிகாவின் நடத்தை சரி இல்லை! ஓவராக பேசிய பயில்வான்... வெச்சு செய்யும் சூர்யா ரசிகர்கள்! 
 

அதே நேரம் தாமதமாக குழந்தை பெற்று கொள்வது கூட ஏற்கனவே நாங்க முடிவு செய்த ஒன்று தான் என கூறினார் உபாசனா. மேலும் உபாசனா தன்னுடைய கருமுட்டையை சேமித்து வைத்து அதன் மூலமே குழந்தை பெற்றெடுத்ததாகவும் தகவல்கள் பரவின. 
 

இதை தொடர்ந்து கடந்த 2023 ஜூன் 20 ஆம் தேதி இரவு, உபாசனா தன்னுடைய மகளை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த தினத்தை ஒரு கொண்டாட்டமாகவே கொண்டாடியது சிரஞ்சீவியின் குடும்பம். அதே போல் மருத்துவமனையில் இருந்த உபாசனாவை பல பிரபலங்கள் வந்து பார்த்தனர். 

Shruti Haasan: லவ் பிரேக்கப் சர்ச்சைக்கு நடுவே... ரணகள கவர்ச்சியில் ஹாட் போட்டோசை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்!
 

ஜோதிடர் வேணு சுவாமி ராம் சரண் மகள் க்ளின் காரா ஜாதகத்தை கணித்து... அவர் மஹத் ஜாதகத்தில் பிறந்தவர் எனவே மகாராணியாக வாழும் அம்சம் கொண்டவர் என கூறியதை தொடர்ந்து பலர், ஒரு வயது கூட நிரம்பாத குழந்தையின் ஜாதகத்தை எப்படி நீங்கள் கணித்து கூறுவீர்கள் என இவரை திட்டி தீர்க்க துவங்கினர்.
 

இதற்க்கு வேணு சுவாமி... அந்த காலங்களில் ராஜாக்களுக்கும், இளவரசர்களுக்கும் குழந்தைகள் பிறந்தால் முதலில் அந்த குழந்தை ஜாதகத்தை கணித்து நாட்டின் வலம் எப்படி இருக்கும் என கணிப்பார்கள் அப்படி இருக்கும் போது... நான் கணிதத்தில் என தவறு என பதில் கொடுத்துள்ளார்.

10 வருட தவம்.. 2 அபார்ஷன்! 42 வயதில் கர்ப்பமாக உள்ளதை அறிவித்த சீரியல் நடிகை ஜூலி! குவியும் ரசிகர்கள் வாழ்த்து
 

உண்மையில் பாலாரிஷ்டம் உள்ள குழந்தைகளின் ஜாதகத்தை தான் பிறந்த உடனே சொல்லக் கூடாது. பாலாரிஷ்டம் உள்ள குழந்தைகளுக்கு 7 வயதுக்குள் பிரகண்டம் இருந்தால் ஜாதகத்தைச் சொல்லக்கூடாது என்கிறது சாஸ்திரம். மேலும் சில நக்ஷத்திரங்களில் பிறந்த குழந்தைகளுக்கு 7வது நாள், 7வது மாதம், 7வது வருடம், 17வது, 37வது மற்றும் 77வது வருடங்களில் பிரகண்டம் இருக்கும். என கூறி உள்ளார். இந்த தகவல் டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!